''என் தந்தைக்கு ஏதாவது தீங்கு ஏற்பட்டால், பிரதமர் நரேந்திர மோடியின் தோலை உரிப்பேன்,'' என பீஹார் மாநிலத்தின் முன் னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் எச்சரித்துள்ளார்.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான, லாலு பிரசாத் யாதவிற்கு அளிக்கப்பட்டு வந்த, 'இசட் பிளஸ்' உயர் பாதுகாப்பை, மத்திய அரசு வாபஸ் பெற்றுள்ளது. அவரது பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்ட, என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்புப் படைவீரர்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக, பாட்னாவில் லாலுவின் மூத்த மகனும், பீஹார் முன்னாள் அமைச் சருமான தேஜ் பிரதாப், நிருபர்களிடம் கூறி யதாவது: என் தந்தையை கொலை செய் வதற்காக மேற்கொள்ளப்படும் சதி வேலை இது. இதற்காக, மத்திய அரசுக்கு தக்க பதிலடி கொடுப்போம். பிரதமர் மோடி யின் தோலை உரிப்போம். இதை, அவரிடம் போய் சொல்லுங்கள். என் தந்தை உயிருக்கு ஏதாவது நிகழ்ந்தால், யார் பொறுப்பேற்பர்? அவர் கொல்லப்பட்டால், யார் பொறுப்பேற்பது? என் தந்தையின் உயிர் முக்கியம் இல்லையா என்றார்.
லாலுவுக்கு, 'இசட்பிளஸ்' பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட போதும், அவரை பாது காக்கும் பணியில், மத்திய ரிசர்வ் பொலிஸ் படையைச் சேர்ந்த, 30 வீரர்கள் நிறுத்தப் பட்டுள்ளனர். இருப்பினும், இசட்பிளஸ் பாது காப்பு, அரசியல்வாதிகளுக்கு கௌரவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM