வவுனியாவில் கணிதபாட ஆசிரியர் ஒருவர் 10ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவருக்கு பிரத்தியேக பரீட்சை வகுப்பு நடாத்துவதாகத் தெரிவித்து அச்சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்துள்ள குற்றத்திற்கு இன்று வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறித்த ஆசிரியரை குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து இறுதி தீர்ப்பை அடுத்தவாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.
நீதிபதி குறித்த ஆசிரியரைக் குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து " இந்த வழக்கானது ஓர் விசித்திரமான வழக்காகும் பள்ளிச்சிறுவன் தனக்கு இலவசமாக கல்வி கற்பித்த ஆசிரியருக்கு எதிராக தன்னை அவர் பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்காகும்" என்று நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தெரிவித்தார்.
2011ஆம் ஆண்டு செட்டிகுளம் - வீரபுரம் பகுதியில் 10ஆம் வகுப்பு படித்த சிறுவன் ஒருவரை 34 வயது நிரம்பிய, திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தந்தையான கணிதபாட ஆசிரியர் தனது வீட்டிற்குப்பக்கத்தில் தனியார் வகுப்பு ஒன்றினை நடாத்தி வந்திருந்ததுடன் மாணவர்களை பரீட்சைக்கு பிரத்தியேகமாக தயார்ப்படுத்துகின்ற சேவையையும் மேற்கொண்டு வந்துள்ளார்.
பரீட்சைக்குத் தோற்றுகின்ற பிரத்தியேக வகுப்பிற்கு வந்து இரவில் அவரது வீட்டில் தங்கி நின்று படித்த 10ஆம் வகுப்பு மாணவன் ஒருவனை பாலியல் துஷ்பிரயோகம் புரிந்ததாக சாட்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த ஆசிரியரை குற்றவாளியாக அடையாளங் கண்டதையடுத்து குறித்த வழக்கின் இறுதி தீர்ப்பை வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் அடுத்தவாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM