குருதி அழுத்தம், விபத்து மற்றும் நீரிழிவு போன்றவற்றின் காரணமாக பாதிக்கப்பட்ட பார்வையை மீட்டெடுக்க ஹைப்பர்சானிக் விட்ரெக்டமி சிஸ்டம் என்ற நவீன சிகிச்சை அறிமுகமாகியிருப்பதாக சென்னையைச் சேர்ந்த பிரபல கண் மருத்துவ நிபுணர் டொக்டர் அமர் அகர்வால் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக மேலும் அவர் விவரிக்கையில், இரத்த அழுத்தம் காரணமாக அண்மையில் தமிழகத்தைச் சேர்ந்த வனிதா என்ற பெண்மணிக்கு இடது கண் பார்வை பாதிக்கப்பட்டது. அவரது கண் பார்வையை மீட்டெடுப்பதற்காக நடத்தப்பட்ட பரிசோதனையில் கண்ணில் இரத்த அடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனை சீராக்க தற்போது நவீன சிகிச்சையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஹைப்பர்சானிக் விட்ரெக்டமி சிஸ்டம் என்ற கருவியைக் கொண்டு சிகிச்சையளிக்கப்பட்டது. இதன்போது அல்ட்ரா சவுண்ட் மூலம் அவரது இடது கண்ணில் இருந்த ரத்த அடைப்பு முற்றிலுமாக நீக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு மீண்டும் பார்வை கிடைத்தது.
அத்துடன் இரத்த அழுத்தம் மட்டுமில்லாமல் விபத்து மற்றும் சர்க்கரை நோயின் காரணமாக பார்வை பாதிக்கப்பட்டால் இந்த நவீன சிகிச்சை மூலம் இழந்த பார்வையை மீட்டெடுக்க இயலும்‘ என்றார்.
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM