இரத்தினபுரி மாவட்ட தோட்டப்பகுதிகளில் காச நோயாளர்களின் தொகை அதிகரித்து வருவதாக இரத்தினபுரி மாவட்ட காச நோய் கட்டுப்பாட்டுப் பரிவு வைத்தியர் எம்.பி.காமினி குணவர்தன தெரிவிதார்.
இந்நோய் தொடர்பான தெளிவான விழிப்புணர்வின்மையும் இவர்கள் முறையாக தொடர்ந்து சிகிச்சை பெறாமையும் இந் நோய் அதிகரிப்பிற்கு பிரதான காரணங்களாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
ஒரு வருடத்தில் இலங்கையில் 14 ஆயிரம் பேர் காச நோயினால் பீடிக்கப்படுவதாகவும் இதில் 10 ஆயிரம் பேர் முறையாக சிகிச்சை பெற்றுக் கொள்வதில்லையெனவும் கணிப்பிடப்பட்டுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் 600 பேர் காச நோயாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். 2016 ஆம் ஆண்டு 579 காச நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் 2பேர் சயரோக நோயினால் இறந்துள்ளனர். இவர்கள் இருவரும் தோட்டப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.
காச நோயினால் பீடிக்கப்பட்ட ஒருவர் முறையாக சிகிச்சை பெற்றுக்கொள்ளாவிட்டால் இந்நோய் 15 பேருக்கு தொற்றுகின்றன. இந்நோயை கட்டுப்படுத்த பிரதேசவாரியாக சிறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச சுகாதார காரியாலயங்கள் ஊடாகவும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM