ஒழுக்கநெறிமிக்க தேசமாக எமது நாட்டை உயர்த்தி "ஒரேநாடு - பாரிய பலம்" என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் ஐக்கியப்படுத்திய நிலையில் 68 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடக் கிடைத்தமையானது நாம் பெற்றுக் கொண்ட வெற்றியாகும் என பிரதமர் ரணில்விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
காலனித்துவத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க அனைத்து மக்கள் பிரிவினரையும் ஒன்றிணைத்து முன்நின்று செயற்பட்டோம். அதேபோன்று , மக்களின் ஜனநாயக உரிமைகள், உரித்துடைமைகளை அடக்கியொடுக்கி, சர்வதேச ரீதியாக நாடு அபகீர்த்திக்கு உட்பட்டுக் கொண்டிருந்த இருண்ட காலப்பகுதியில் சர்வதிகாரத்திலிருந்தும் குடும்ப ஆட்சியிலிருந்தும் நாட்டை மீடடெடுக்க நாம் முன்நின்று செயற்பட்டோம்.
அதன் மிகச் சிறந்த பெறுபேறு கடந்த ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி நாம் பெற்றுக் கொண்ட வெற்றியாகும்.
அவ்வாறு பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை நிலையான, மிகவும் அர்த்தபூர்வமான சுதந்திரமாக மாற்றிக் கொள்ளும் பொறுப்பு தற்போது நம் அனைவர் மீதும் உள்ளது. அதற்காக வேண்டி இன, மத, கட்சி பேதமின்றி இலங்கை மக்கள் அனைவரோடும் கைகோர்த்து செயற்படுவது தற்போதைய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.
மனித உரிமைகளை பாதுகாக்கும், சுதந்திரமான, கௌரவம் மிக்க நாடாக எமது தனித்துவத்தை சர்வதேசத்தின் முன்னே நாம் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். சட்டம், ஒழுங்கு மற்றும் நல்லிணக்கத்தைப் பாதுகாத்து, முன்னேற்றகரமான சமூக, பொருளாதார சூழலில் நாட்டைக் கட்டியெழுப்பும் பாரிய பணி நம் முன்பே உள்ளது.
இந்த மொத்த செயற்பாட்டிலும் தமது வகிபாகத்தை ஒழுங்காக விளங்கி தேசத்தின் முன்னேற்றத்திற்காக உண்மையான பிரஜையாக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதை இச்சுதந்திர தினத்தில் விசேடமாக மனதில் கொள்வோம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM