பதுளை பிரதேச செயலகங்களில் மூன்றிலொரு வீதமானோர் எழுத, வாசிக்கத் தெரியாதவர்கள்

Published By: Priyatharshan

04 Feb, 2016 | 09:31 AM
image

பதுளை பிர­தேச செய­ல­கங்­களில் மூன்றில் ஒரு வீத­மானோர் எழுத வாசிக்கத் தெரி­யா­த­வர்­க­ளாக இருந்து வரு­கின்­றனர். அத்­துடன், பதுளை மாவட்­டத்தின் ஆறு பிர­தேச செய­லகப் பிரி­வு­களில் மூன்று செய­ல­கப்­பி­ரி­வுகள் கஷ்டப் பிர­தேச செய­லக பிரி­வு­க­ளா­கவே இருந்து வரு­கின்­றன என்று மக்கள் விடு­தலை முன்­னணி இளைஞர் அமைப்பின் தேசிய அமைப்­பாளர் பிமல் ரட்­னா­யக்க எம்.பி. தெரி­வித்தார்.

பதுளை வை.எம்.ஏ.மண்­ட­பத்தில் இல் நடை­பெற்ற இளைஞர் அமைப்பின் பதுளை மாவட்ட மாநாட்டில் அமைப்பின் தேசிய அமைப்­பாளர் பிமல் ரட்­னா­யக்க எம்.பி. கலந்­து­கொண்டு பேசு­கையில் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

தொடர்ந்து அவர் பேசு­கையில்இ இலங்­கை­யி­லேயே ஆகக்­கு­றைந்த க.பொ.த. சாதா­ரண தரப்­ப­ரீட்சைப் பெறு­பேற்­றினை பெற்­ற­வர்­களும் பதுளை மாவட்­டத்தில் மீகா­கி­யுல பிர­தேச செய­லகப் பிரி­வி­லேயே இருந்து வரு­கின்­றனர். பதுளை மாவட்­டத்தில் காலா­கா­லமாக அமைச்­சர்­க­ளாக அர­சியல் தலை­வர்­க­ளாக இருந்­து­வரும் நிமல் சிறி­பால டி சில்வாஇ டிலான் பெரேராஇ சம­ர­வீர குடும்­பத்­தினர் ஆகியோர் பதுளை மாவட்­டத்தில் மேற்­கொண்டு வந்த சமூக மேம்­பாட்டு வேலைத்­திட்­டங்­களின் பயன்தான் இவைகள்.

பதுளை மாவட்­டத்தின் பின்­ன­டை­வுகள் குறித்து அவ­தா­னிப்­போ­மே­யானால் மேற்­கண்ட தலை­வர்கள் என்ன செய்­தார்கள் என்று கேட்கத் தோன்­று­கின்­றது. எமது நாட்டின் மக்கள் தொகையில் சரி­பா­தி­யைக்­கொண்ட நாடு கியூபா­வாகும். ஐம்­பது வரு­ட­கா­ல­மாக எமது நாடு ஒலிம்பிக் பதக்கம் இரண்டை மட்­டுமே பெற்­றுள்­ளது. ஆனால், கியூபா 384 ஒலிம்பிக் பதக்­கங்­களை சுவீ­க­ரித்­தி­ருக்­கின்­றது.

எமது நாட்டின் ஐம்­பது குடும்­பங்­க­ளுக்கு ஒருவர் என்ற வகையில் போதை­வஸ்து விற்­பனை மற்றும் பாவ­னை­யா­ள­ராக இருந்து வரு­கின்ற நிலை­யினைக் காண்­கின்றோம். ஆனால்இ கியூபாவில் 112 குடும்­பங்­க­ளுக்கு ஒருவர் விஞ்­ஞா­னி­யாக இருந்து வரு­கின்றார். எமது நாட்டில் தின­மொன்­றிற்கு 11 பேர் தற்­கொலை செய்து கொள்­வ­தாக குறிப்­பி­டப்­ப­டு­கின்­றது.

அவர்­களில் ஐந்­துபேர் இரு­பது வய­திற்கு குறைந்­த­வர்­க­ளாவர். ஆனால் கியூபாவில் தற்­கொலை செய்­ப­வர்கள் கிடை­யாது. கியூ­பாவில் 120 பேருக்கு ஒருவர் டாக்­ட­ராக இருந்­து­வ­ரு­வதும் விசேட அம்­ச­மாகும். கல்விஇ விளை­யாட்டு ஆகிய எந்­த­வொரு விட­யத்­திலும் கியூபா மக்கள் முன்­ன­ணி­யி­லேயே உள்­ளனர்.

பதுளை மாவட்­டத்தில் ஒரு வரு­டத்தில் பன்­னி­ரண்­டா­யிரம் இளைஞர்இ யுவ­திகள் தொழில் வாய்ப்­புக்­களை எதிர்­நோக்­கிய வண்­ண­முள்­ளனர். இதற்­கென நிரந்­தர வேலைத்­திட்­ட­மொன்று இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இந்­நாட்டில் சமூக மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தவும் சமூ­கத்தை நல்­ல­தொரு நிலைக்கு கொண்­டு­வ­ரவும் இந்­நாட்­டி­னது ஆட்­சி­யா­ளர்­களால் கடந்த 60 வரு­டங்­க­ளா­கவே முடியவில்லையென்பது தௌிவாகியுள்ளது.

நாட்டில் சிறந்ததோர் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்கு சிறந்த தலைவரொருவர் அவசியமாகும். அத்தகைய தலைவருக்கான வெற்றிடம் எமது நாட்டில் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. அதனைப் பூர்த்தி செய்ய வேண்டியது இளைஞர்களது கடப்பாடாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06
news-image

சட்டவிரோத செயற்பாடுகளுடன் தொடர்புடைய வடக்கு தலைவர்கள்...

2025-04-17 21:02:04