பொகவந்தலாவ டின்சின் தோட்டத்தில் உள்ள கிரிஸ்தவ ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற திருவிழாவின் போது வழங்கபட்ட அன்னதானத்தை உட்கொண்ட 80 பேர் உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி மற்றும் வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் கதிரவேல் ஜெயகனேஸ் தெரிவித்தார்.
இந்த சம்பவம் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.
நேற்று ஞாயிற்றுகிழமை குறித்த தோட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயமொன்றில் இடம்பெற்ற திருவிழாவின் போது வழங்கபட்ட அன்னதானத்தை உட்கொண்ட குறித்த தோட்டத்தில் உள்ள 80 பேர் பாதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவை பிரதேசத்திற்கு பொறுப்பான பொதுசுகாதார பரிசோதகரினால் முன்னெடுக்கப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, பொகவந்தலாவை டின்சின் தோட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் வழங்கபட்ட அன்னதானத்திற்கு சுகாதார பரிசோதகர் காரியாலயத்தில் அனுமதி பெறப்படவில்லையெனவும் பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்
உணவு ஒவ்வாமையின் காரணமாக பாதிக்கபட்டவர்களுள் 15 பேர் பொகவந்தலாவை மாவட்டவைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவில் சிகிச்சை பெற்றுசென்றுள்ளதுடன் நான்கு பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைபெற்று வருவதாகவும் பொகவந்தலாவை தோட்டவைத்தியசாலையில் 10 பேர் சிகிச்சைபெற்றுள்ளதாகவும் மேலும் 20 பேர் டிக்கோயா கிளங்கன் மாவட்டவைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுக்கொண்டு சென்றுள்ளதாக வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, ஆலயநிர்வாகத்தின் மீது 08.12.2017 அன்று அட்டன் நீதிவான் நீதிமன்றில் வழங்கு தொடரவுள்ளதாகவும் பொகவந்தலாவை பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர் கதிரவேல் ஜெயகனேஸ் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM