உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்தும்படி அரசாங்கத்தை வலியுறுத்தி ஜே.வி.பி நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளதாக அதன் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.
முதலாவது ஆர்ப்பாட்டம் 30ஆம் திகதி வியாழக்கிழமை கொழும்பில் நடைபெறுமெனவும் அவர் தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம்வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றிணையும் வரை உள்ளூராட்சித் தேர்தல்களை பிற்போடுவதற்கு மைத்திரி தரப்பு ஸ்ரீல.சு.கட்சி சூழ்ச்சி செய்வதாகவும் டில்வின் சில்வா குற்றஞ்சாட்டினார்.