மன்னார் மாவட்டத்தில் உள்ள இரண்டு மாவீரர் துயிலுமில்லங்களிலும் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் ஆட்காட்டிவெளி, மற்றும் பண்டிவிரிச்சான் ஆகிய மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்புரவு பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளது.
இந்த நிலையில் எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வு இடம் பெறவுள்ளது.
எனவே குறித்த இரண்டு மாவீரர் துயிலும் இல்லங்களுக்குரிய மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்களை எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை உரிய நேரத்திற்கு வருகை தருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
குறித்த மாவீரர் துயிலும் இல்லங்களில் சகல பணிகளும் பூர்த்தியடைந்துள்ளமையால் அநாவசியமற்ற குழப்பங்களை எவரும் ஏற்படுத்த வேண்டாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என மன்னார் மாவட்ட நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM