கிளிநொச்சி திருவையாறு பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஐந்து சிறுவர்கள், சிறுவர் இல்லத்தை விட்டு தப்பியோடியமையினால் பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
கைகளில் காயங்களுடன் திருவையாறு சிறுவர் இல்லத்திலிருந்து சிறுவர்கள் தப்பியோடியுள்ளனர்.
குறித்த சிறுவர் இல்லத்திலிருந்து வெளியேறி அயலில் உள்ள காணிகளில் இவர்கள் ஒளிந்திருந்த நிலையில் கிராமத்து இளைஞர்கள் குறித்த சிறுவர்களை மீட்டு விசாரித்த போது இல்லத்தில் உள்ள தங்களுக்கு பொறுப்பானவர்கள் தாக்கியதனால் தாங்கள் சிறுவர் இல்லத்திலிருந்து ஓடிவந்து விட்டதாகவும் இரவு ஒன்று கூடலுக்கு தாமதமாகியும் செல்லாத காரணத்தினால் தங்களுக்கு கடுமையாக அடி விழுந்ததாகவும் சிறுவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு ஒரு சிறுவன் தனது கையில் ஏற்பட்ட காயத்தை காட்டி அடித்ததால் ஏற்பட்ட காயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த சிறுவர் இல்ல ஊழியர்கள் தாங்கள் சிறுவர்களை தாக்கவில்லை என்றும் இரவு ஒன்று கூடலுக்கு சிறுவர்கள் சமுகம் தராது மரங்களில் ஏறியிருந்ததாகவும், சிறுவர்களை ஒன்று சேர்ப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் போதே சிறுவர்கள் இல்லத்தை விட்டு ஓடியதாகவும் குறிப்பிட்டவர்கள் ஒரு சிறுவனின் கையில் ஏற்பட்ட காயம் அவர் மரத்திலிருந்து இறங்கும் போது ஏற்பட்ட காயம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் மாவட்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரிக்கு தகவல் அனுப்பப்பட்டு அவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று நிலைமைகளை ஆராய்ந்ததோடு சிறுவர்களை மீண்டும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளதுடன் மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM