இன்றைய திகதியில் திருமணமான தம்பதிகளில் 15 சதவீதத்தினர் குழந்தையின்மை பிரச்சினையைச் சந்திக்கிறார்கள். அதில் பெரும்பான்மையான பெண்கள் பொலிஸிஸ்டிக் ஓவரிஸ் சிண்ட்ரோம் என்ற பாதிப்புடையவர்களாக இருக்கிறார்கள்.
இவர்களுக்கு இந்த பிரச்சினை திருமணமான பிறகு ஏற்படுவதில்லை. இவர்கள் 12 வயதிற்குள் இருக்கும் போதே அசைவ உணவினை விரும்பி சாப்பிடுபவர்களாகயிருப்பார்கள். அதிலும் ஆட்டிறைச்சி மற்றும் கோழியிறைச்சியை அதிகமாக விரும்பி சாப்பிடும் பிள்ளைகள் 10 அல்லது 11வது வயதிலேயே பூப்பெய்தி விடுவார்கள்.
இதற்கு காரணம் வணிக நோக்கில் வளர்க்கப்படும் கோழி மற்றும் ஆட்டிற்கு அதிக எடை அதிகரிக்கவேண்டும் என்பதற்காக வழங்கும் வேதிப் பொருளேக் காரணம். இந்த வேதிப் பொருளை சாப்பிடும் பிள்ளைகள், மலச்சிக்கல் என்ற பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இந்த மாமிச உணவு எளிதில் ஜீரணமாவதில்லை. அதனால் தான் பெண் பிள்ளைகளைப் பெற்றிருக்கும் பெற்றோர்களிடம் மருத்துவர்களும், மருத்துவ நல அலுவலர்களும் கோழியிறைச்சியை அதிகம் வாங்கித்தரவேண்டாம் என்று பரிந்துரைக்கிறார்கள்.
ஆனால் பெற்றோர்கள் இதைக் காது கொடுத்து கேட்பதில்லை. தங்களுடைய பிள்ளைகள் விருப்பப்பட்டு கேட்டு விட்டார்கள் என்ற காரணத்தை முன்னிறுத்தி, சந்தையில் விற்பனையாகும் வறுத்த கோழியிறைச்சியை வாங்கி தருகிறார்கள்.
இது குடலின் சக்தியை குறைத்துவிடுகிறது. இதனால் அவர்களின் மாதவிடாய் சுழற்சியில் கோளாறு ஏற்படத் தொடங்குகிறது. கர்ப்பப்பையில் பொலிஸிஸ்டிக் ஓவரிஸ் எனப்படும் நீர்க்கட்டிகள் உருவாகின்றன. இது குழந்தையின்மையையும் ஏற்படுத்துகிறது. அத்துடன் மாதவிடாய் நின்ற பிறகு இத்தகைய பெண்கள் ஓஸ்டியோபோரோஸிஸ் எனப்படும் எலும்பு தேய்மான பிரச்சினைகளையும் சந்திக்க நேரிடுகிறது. அதனால் பெண் பிள்ளைகள், நார்ச்சத்து அதிமுள்ள தாவர உணவுகளைச் சாப்பிட்டு, மலச்சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அப்போது தான் மாத விடாய் சுழற்சி சீராக இருக்கும்.குழந்தையின்மை பிரச்சினையும் வராது.
டொக்டர் எஸ் ப்ரீத்தி
தொகுப்பு அனுஷா.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM