தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உடைய சமூக வலைதள பயன்பாட்டாளர்களை ட்விட்டர் மூலம் தொடர்புகொண்டு அவர்களைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜப்பானிய நபர் அந் நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜப்பானில் உள்ள ஜாமா நகரில் ஒன்பது பேரின் உடல்கள் 27 வயதுள்ள தகாஹிரோ ஷிராஷி என்னும் நபரின் அடுக்கு மாடி வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பின்னரே அவர் கைது செய்யப்பட்டார்.
தற்கொலை எண்ணம் உடையவர்களை தொடர்புகொண்ட குறித்த நபர் அவர்கள் இறக்க தாம் உதவுவதாகவும், சிலரிடம் தானும் அவர்களுடன் சேர்ந்து இறக்கப்போவதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் அவர்களை குறித்த வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார்.குறித்த நபர் கொலை செய்தவர்களில் 15 வயதுடைய சிறுமி ஒருவரும் அடங்குகின்றார்.
குறித்த நபரை டுவிட்டர் கொலையாளி என அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டுவிட்டர் மூலம் நிகழ்ந்துள்ள இந்த வேதனையான நிகழ்வுக்கு தாம் மிகவும் கவலையுற்றிருப்பதாக ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM