இலங்கையில் மனித உரிமைகளை மீள் நிறுவ அரசு தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும் எனினும் இலங்கை போன்ற ஜனநாயக நாட்டில் மனித உரிமைகளை வேக வேகமாக மீள் நிறுவ முடியாதுள்ளது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அவையில் சற்று முன் பேசிய இலங்கைப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா. மனித உரிமைகள் அமர்வின் மூன்றாவது சுற்று காலாந்தர மதிப்பாய்வை முன்வைத்துப் பேசியபோதே இலங்கைக் குழுவினர் இவ்வாறு தெரிவித்தனர்.
தேசிய கொள்கைகள் பொருளாதார விவகாரத்துறை பிரதியமைச்சர் டொக்டர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான குழு மேற்படி அமர்வில் கலந்துகொண்டுள்ளது.
இதில் பேசிய பிரதியமைச்சர் தெரிவித்ததாவது:
“சவால்கள் இல்லாத நாடுகளே இல்லை. எந்தவொரு நாட்டிலும் அந்நாட்டுச் சட்டங்கள் முழுமையாக அமுல் ஆவதில்லை. முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கினாலும்கூட, மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதும் அதைப் பாதுகாப்பதும் ஒரே நாளில் நடந்துவிடக் கூடியது அல்ல.
“மனித உரிமைகளை முழுமையாக அமுல்படுத்துவது குறித்த எமது முயற்சிகள் மீதான சர்வதேசத்தினது விமர்சனங்களை வரவேற்கிறோம். எமது செயற்பாடுகள் குறித்துக் கலந்துரையாடவும் நாம் தயாராக உள்ளோம்.
“ஆனால், எமது இந்த முயற்சியை சர்வதேசத் தலையீடுகளின் மூலம் குழப்புவதற்குச் சில சக்திகள் இயங்குவதை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
“எனினும், மனித உரிமைகளை முழுமையாக நாட்டில் அமுல்படுத்துவதில் இலங்கை அரசு முழுமனதுடன் உழைக்கும்.”
இவ்வாறு பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM