காளானை உணவுடன் சேர்த்து உண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர், உணவு ஒவ்வாமையினால் இரத்த வாந்தி எடுத்து மயக்கமுற்ற நிலையில் கந்தகெட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் மூவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் கந்தகெட்டிய பகுதியின் புதுகேகந்த என்ற கிராமத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளது.
வீட்டுத் தோட்டத்தில் இயற்கையாக வளர்ந்திருந்த காளான்களை உணவிற்கு சமைத்து உண்டதையடுத்தே, மேற்குறிப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் இரத்த வாந்தி எடுத்து, மயக்கமுற்றுள்ளனர்.
இவர்களில் ஐவர் ஆரம்ப சிகிச்சைகளைப் பெற்று வைத்தியசாலையை விட்டு வீடு திரும்பினர். மேலும் மூவர் ஆபத்தான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவர்கள் உண்ட காளான் உணவின் மாதிரிகள் வைத்திய பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் கந்தகெட்டிய பொலிஸார் மேற்படி சம்பவம் குறித்து, விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM