கடுமையான உணர்வு ரீதியான மன அழுத்தமானது மாரடைப்பைப் போன்று இருதயத்தை சேதப்படுத்துவதாக பிரித்தானிய மருத்துவ ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
பிரித்தானியாவில் மேற்படி உணர்வு ரீதியான மன அழுத்தப் பாதிப்பால் குறைந்தது 3,000 க்கு மேற்பட்ட வயதுவந்தவர்கள் இருதய பாதிப்புக்குள்ளாவதாகவும் அந்தப் பாதிப்பு இருதய தசைகளை நிரந்தரமாக பலவீனப்படுத்துவதாகவும் அபெர்டீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அவர்களது ஆய்வின் முடிவுகள் அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் அனஹெயிம் எனும் இடத்தில் கடந்த சனிக்கிழமை ஆரம்பமாகி நாளை புதன்கிழமை நிறைவடையவுள்ள அமெரிக்க இருதய சங்கத்தின் விஞ்ஞானக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
கடும் மன அழுத்தத்துக்குள்ளாகி இருதய பாதிப்பு ஏற்பட்ட 37 பேரிடம் நீண்ட கால அடிப்படையில் இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன் போது அவர்களது இருதயத்திலான பாதிப்பு நிலை குறித்து அல்ட்ரா சவுண்ட் தொழில்நுட்பம், எம்.ஆர்.ஐ. ஊடுகாட்டும் பரிசோதனை என்பவற்றை பயன்படுத்தி ஓழுங்கு முறையாக பரிசோதிக்கப்பட்டது.
தமது ஆய்வில் கடுமையான உணர்வு ரீதியான மனஅழுத்தமானது இருதயத்தில் நிரந்தரமாக பாதிப்பை ஏற்படுத்துவது கண்டறியப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்
கடும் உணர்வு ரீதியான பாதிப்புக்குள்ளானவர்கள் காலப்போக்கில் முழுமையாக குணமடைந்து விடுவார்கள் என தவறாக கருதி அத்தகையவர்களுக்கு நீண்ட கால சிகிச்சை வழங்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டிய ஆய்வாளர்கள், அவர்களுக்கு மாரடைப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் அதே மருந்துகள் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM