களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் அர­சினால் பொறுப்­பேற்­கப்­படும்

Published By: Robert

12 Nov, 2017 | 11:46 AM
image

பெருந்­தோட்ட வைத்­தி­ய­சா­லை­களை அர­சாங்கம் பொறுப்­பேற்­க­வுள்ள திட்­டத்தின் கீழ், களுத்­துறை மாவட்­டத்­தி­லுள்ள 13 தோட்ட வைத்­தி­ய­சா­லைகள் அர­சாங்­கத்­தினால் பொறுப்­பேற்­கப்­பட்டு, அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வுள்­ள­தாக சுகா­தார அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன தெரி­வித்­துள்ளார். 

தோட்ட வைத்­தி­ய­சா­லை­களை அபி­வி­ருத்தி செய்­வதன் மூலம் பெரி­யாஸ்­பத்­திரி, போதனா வைத்­தி­ய­சாலை, ஆதார வைத்­தி­ய­சாலை மற்றும் பிராந்­திய வைத்­தி­ய­சா­லை­களில் ஏற்­படும் நெருக்­க­டி­களைக் குறைக்க முடியும். அத்­துடன்,  பெரும் சிர­மத்­துக்கு மத்­தியில் நீண்ட தூரம் சென்று சிகிச்சை பெறும் தோட்டத் தொழி­லா­ளர்­களும் சிர­ம­மின்றி இல­கு­வாக சிகிச்சை பெற்­றுக்­கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர். 

களுத்­துறை மாவட்­டத்தில் வோகன், சென்ஜோர்ஜ், மில்­ல­கந்த, ஹல்­வத்­துறை, அரப்­பொ­ல­கந்த, சிரி­கந்­துர, மிரிஸ்­வத்த, டெல்கீத், அஷ்க்­வெளி, பள்­ளே­கொட, குளோடன்  உள்­ளிட்ட 13 தோட்ட ஆஸ்­பத்­தி­ரிகள் பொறுப்­பேற்­கப்­ப­ட­வுள்­ளன. 

ஏற்­க­னவே, இம்­மா­வட்­டத்தில் நான்கு வைத்­தி­ய­சா­லைகள் அர­சினால் பொறுப்­பேற்­கப்­பட்­டுள்­ளன. அவற்றில் கீக்­கி­ய­ன­கந்த தோட்ட ஆஸ்­பத்­திரி சுமார் 25 மில்­லியன் செல­விலும், நியூச்­செட்டல் தோட்ட ஆஸ்­பத்­திரி சுமார் 35 மில்­லியன் செல­விலும் நோயா­ளர்கள் தங்­கி­யி­ருந்து சிகிச்சை பெற்­றுக்­கொள்ளக் கூடிய வார்ட் வசதி  உட்­பட அனைத்து வச­தி­களும் ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

இங்­கி­ரிய, றைகம் தோட்­டத்தில் இரண்டு ஏக்கர் காணி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு சுமார் 35 மில்­லியன் செலவில், சகல வச­தி­க­ளு­டனும் கூடிய புதிய  வைத்­தி­ய­சாலை தற்­பொ­ழுது  நிர்­மா­ணிக்­கப்­பட்டு வரு­கின்­றது. புளத்­சிங்­கள, கோவின்ன,  புரொ­ஸஸ்­டந்த தோட்ட வைத்­தி­ய­சாலை சுமார் 20 மில்­லியன் ரூபா செலவில், அடுத்த ஆண்டில் புன­ர­மைப்புச் செய்­யப்­ப­ட­வுள்­ளது. 

இதே­வேளை,   களுத்­துறை மாவட்­டத்தில் தற்­பொ­ழுது அபி­வி­ருத்தி செய்­யப்­பட்டு வரும் களுத்­துறை– நாகொட வைத்­தி­ய­சாலை, பேரு­வளை ஆதார வைத்­தி­ய­சாலை, அளுத்­கம, தர்காநகர், ஹொரணை, பண்டாரகம, மிம்புர, பதுரலிய, மீகஹதென்ன, இங்கிரிய, கட்டுகஹஹேன, மோற்காவ ஆகிய வைத்தியசாலைகளின் அபிவிருத்தி நடவடிக்கைகளை துரித கதியில் பூர்த்தி செய்யுமாறு அமைச்சர் கட்டட ஒப்பந்தக்காரர்களைக் கேட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணை சுருக்கத்தை; ...

2025-02-10 02:02:13
news-image

இழப்புக்களை ஏற்படுத்த தூண்டியவர்களை இனங்கண்டுள்ளோம்; அவர்களுக்கெதிராக...

2025-02-10 01:54:10
news-image

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்தடை ...

2025-02-10 01:46:26
news-image

எந்தவொரு வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர்...

2025-02-09 15:15:31
news-image

பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு இன்றேல் நிச்சயம் நாட்டுக்கு...

2025-02-09 15:22:37
news-image

ஜனாதிபதி நீதித்துறை கட்டமைப்பில் தலையீடு செய்யப்போவதில்லை...

2025-02-09 19:41:29
news-image

Clean sri lanka நிகழ்ச்சித் திட்டம்...

2025-02-09 23:19:15
news-image

யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவபீட மாணவர்களிடையே மோதல்...

2025-02-09 22:25:18
news-image

பா.உறுப்பினர்கள்122 கோடி ரூபா இழப்பீடு பெற்றுக்கொண்டமை...

2025-02-09 17:13:39
news-image

வீடுகளுக்கு தீ வைத்ததாலே அரங்கத்துக்கு நஷ்டஈடு...

2025-02-09 17:28:01
news-image

அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்கும் பிரதமருக்கும்...

2025-02-09 19:55:46
news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20