புத்திசாலித்தனமாக பெட்ரோலை திருடி குடிக்கும் குரங்கு.

Published By: Digital Desk 7

10 Nov, 2017 | 06:03 PM
image

இந்தியாவிலுள்ள ஹரியானா மாவட்டத்தில் உள்ள பானிபட்டில் உள்ள குரங்கு ஒன்று இருசக்கர வாகனங்களிலிருந்து பெட்ரோலை திருடி குடித்து வருகிறது. இதனால் அப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த குரங்கு வாகன ஓட்டிகளின் இருசக்கர வாகனங்களிலில் எஞ்சினுக்குச் செல்லும் பெட்ரோல் ட்யூபை பிடுங்கி புத்திசாலித்தனமாக பெட்ரோலை திருடி குடிக்கின்றது. 

இதனால் வாகன ஓட்டிகள் சில சமயங்களில் பெட்ரோல் இன்றி திண்டாடும் நிலையும் ஏற்பட்டுள்ளதாம்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right