இலங்கைக் கிரிக்கெட் அணியை தூக்கி நிறுத்தும் பொறுப்பை சந்திக்க ஹத்துருசிங்க ஏற்றுக்கொள்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த கிரஹம் போர்ட், அண்மையில் இராஜினாமா செய்து சொந்த நாட்டுக்கு திரும்பினார். இந்நிலையில் இலங்கை அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக செயற்பட்டு வந்த நிக் போதஸ் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.
தற்போது இலங்கை அணி கடும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் தலைமைப் பயிற்சியாளர் ஒருவரை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் தேடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் தலைமைப் பயிற்சிப் பொறுப்பை ஏற்க அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர்கள்
இருவர் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அந்தப் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் பயிற்சியாளர் அனில் கும்ப்ளேயும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் பங்களாதேஷ் அணியின் வீரிய வளர்ச்சிக்கு காரணமான இலங்கை
அணியின் முன்னாள் வீரரான ஹத்துருசிங்க பயிற்சியாளராக வருவதையே அனைவரும் விரும்பினர். அந்தவகையில்
தற்போது சந்திக்க ஹத்துருசிங்க இலங் கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பங்களாதேஷின் தலைமைப் பயிற்சியாளராக உள்ள அவர் அந்தப் பதவியிலிருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்து இலங்கை அணியை மீட்டெடுக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM