இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இந்திய அணியிலிருந்து டோனியை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிரான 2ஆ-வது இருபதுக்கு 20 போட்டியில் இந்திய அணி தோற்றது தொடர்பாக டோனி விமர்சனத்துக்கு உள்ளானார்.
மிகப்பெரிய இலக்கு இருக்கும் போது அவர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால் இருபதுக்கு 20 போட்டியில் இருந்து டோனி விலகி இளம் வீரர்களுக்கு வழிவிடவேண்டும் என்று முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமணன், அகார்கர் ஆகியோர் விமர்சித்திருந்தனர்.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரிலிருந்து டோனியை நீக்கிவிட்டு வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-
நியூஸிலாந்துக்கு எதிரான தொடர் முடிந்துவிட்டது. அடுத்து இலங்கையுடன் இந்திய அணி விளையாடுகிறது. அந்த அணி உயர்மட்ட அளவில் சமநிலையான அணி அல்ல. நாம் வாய்ப்புகளை பெறலாம்.
ஆனால் இந்த தொடருக்கு பிறகு வலிமையான தென்னாபிரிக்காவுடன் விளையாடுகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இதில் கடினமாக போராட வேண்டி இருக்கும்.
இதனால் இலங்கைக்கு எதிரான தொடரில் டோனிக்கு பதிலாக வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டோனி விடயத்தில் விதிமீறல் நடந்துள்ளது. அவரது ஆட்டத்திறன் குறைந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM