தெஹிவளை வீட்டில் தீ!

Published By: Devika

08 Nov, 2017 | 09:58 PM
image

தெஹிவளை, சஞ்சயபுரவில் பகுதியில் சற்று முன் வீடு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த வீட்டின் முதலாம் மாடியில் பெரும் தீ ஏற்பட்டுள்ளது. இதை அவதானித்த அயலவர்கள்,  தீயணைப்பு உத்தியோகத்தர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளதுடன் தீயணைப்பிலும் இறங்கினர். இதனால், சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னதாகவே தீ ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

எரிந்த அந்த மாடியில் வாடகை  அடிப்படையில்  கொழும்பின் பிரதான வர்த்தக நிலையம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞர்களே குடியிருந்ததாகவும், விபத்தின்போது ஒருவரும் அங்கிருக்கவில்லை என்பதால் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரியவருகிறது.

எனினும், அவர்களது உடைமைகள் அனைத்தும் எரிந்து விட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

கைபேசிக்கு கொடுத்திருந்த மின் இணைப்பே விபத்துக்குக் காரணம் என்றும், மின்னழுத்தி முறையாக அணைத்து வைக்கப்படாததே காரணம் என்றும் பல்வேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

எனினும், உறுதியான காரணம் எதுவும் இதுவர தெரியவரவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58