முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அலுவலக பிரதானியாக செயற்பட்ட காமினி செனரத் இம்மாதம் 9 ஆம் திகதி கோட்டை நீதிவான் நீதிமன்றில் சரணடைய தயார் என அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் நேற்றைய தினம் அவரது சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றுக்கு அறிவித்தனர். நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினர் தம்மை கைது செய்ய முயற்சிப்பதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறு கூறியும் காமினி செனரத் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதோடு அவரது சட்டத்தரணிகள் இவ்விடயத்தை நீதிமன்றுக்கு தெரிவித்தனர்.
அத்துடன் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவினர் முன்னெடுக்கும் விசாரணைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க தான் தயார் எனவும் காமினி செனரத் தனது சட்டத்தரணிகளூடாக நீதிமன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
அதன்படி இது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 17 ஆம் திக திக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் அலுவலக பிரதானியாக செயற்பட்ட காமினி செனரத் உள்ளிட்ட மூவருக்கு கடந்த ஒக்டோபர் 31 ஆம் திகதி கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன வெளிநாட்டு பயணத் தடைவிதித்து உத்தரவு பிறப்பித்திருந்தார். நிதிக்குற்ற புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்துள்ள விசாரணையொன்று தொடர்பில் காமினி செனரத் உள்ளிட்டோரை கைதுசெய்வதற்கான அவசியம் ஏற்பட்ட நிலையில் அம்மூவரும் விசாரணைக்கு ஒத்துழைக்காது இருந்து வந்தமையால் நிதிக்குற்ற புலனாய்வு பிரிவின் கோரிக்கைக்கு அமைவாக இந்த பயணத்தடை விதிக்கப்பட்டது.
காமினி செனரத், பியதாச குடாபாலகே, நீல் பண்டார அப்புஹின்ன ஆகியோரின் வெளிநாட்டு பயணமே தடைசெய்யப்பட்டுள்ளது.
கடந்த அரசின் காலப்பகுதியில் அமைச்சர வையின் அனுமதியுடன் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு சொந்தமான 18.5 பில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட சினோ லங்கா ஹோட்டல் திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து 4.4 பில்லியன் ரூபாவை சட்டவிரோதமாக அம்பாந்தோட்டை கிரான்ட் ஹைட் ஹோட்டல் திட்டத்துக்கு பயன்படுத்தி பணமோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டே காமினி செனரத் உள்ளிட்டோருக்கு எதிரான விசாரணைகள் நிதிக்குற்றப்புலனாய்வு பிரி வினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM