ஹிருணிக்காவைத் தவிர ஏனைய  8 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர் : தீர்ப்பு 24 இல்

Published By: Priyatharshan

06 Nov, 2017 | 02:14 PM
image

கடந்த 2015 ஆம் ஆண்டு தெமட்டகொடையில் வைத்து இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திரவைத் தவிர ஏனைய எட்டுப் பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 21 ஆம் திகதி, ஹிருணிக்காவுக்கு சொந்தமானதாக கூறப்படும் வாகனம் ஒன்றில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டதாக குற்றம்சுமத்தப்பட்டு, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்க உள்ளிட்ட ஒன்பது பேருக்கு எதிராக, சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

குறித்த கடத்தல் தொடர்பான வழக்கு விசாரணை  இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு பேரும் தங்களது குற்றங்களை ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ஹிருணிக்கா தவிர்ந்த குற்றத்தை ஒப்புக்கொண்ட குறித்த எட்டு பேருக்கும் எதிர்வரும் 24 ஆம் திகதி தண்டனைத் தீர்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பராமரிப்பற்ற நிலையில் வவுனியா புதிய பேருந்து...

2025-03-19 11:48:53
news-image

ஏறாவூர் பகுதியில் ஸ்ரீ நாகலிங்கேஸ்வரர் ஆலயம்...

2025-03-19 11:10:32
news-image

புதிதாக சிந்திப்போம், புதுமை காண்போம் வழிகாட்டல்...

2025-03-19 11:07:05
news-image

நகை கடையிலிருந்து தங்கச் சங்கிலிகளை திருடிச்...

2025-03-19 11:12:28
news-image

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11,081 குடும்பங்களுக்கு காணிகள்...

2025-03-19 11:09:33
news-image

வீட்டிலிருந்த அங்கவீனரை கொலை செய்து பெறுமதியான...

2025-03-19 11:37:11
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-03-19 10:08:17
news-image

பா. உ. அர்ச்சுனாவால் தேசிய நல்லிணக்கத்திற்கு...

2025-03-19 10:59:36
news-image

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து...

2025-03-19 09:23:29
news-image

இராமேஸ்வரம் மீனவர்கள் மூவர் இலங்கை கடற்படையால்...

2025-03-19 11:35:02
news-image

தகவல் தொழில்நுட்ப சேவைகள் ஏற்றுமதி துறைக்கு...

2025-03-19 09:25:20
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண்ணொருவர் கொலை...

2025-03-19 09:05:38