யாழ். சென்ற சிறப்பு சி.‍‍ஐ.டி. குழு மாவை எம்.பி.யிடம் விசா­ரணை

Published By: Priyatharshan

06 Nov, 2017 | 10:06 AM
image

புங்­கு­டு­தீவு பகு­தியில்  படு­கொலை செய்­யப்­பட்ட மாணவி வித்­யாவின் கொலை தொடர்­பி­லான பிர­தான குற்­ற­வாளி சுவிஸ் குமார் முதலில் கைது­செய்­யப்­பட்ட போது தப்பிச் சென்­றமை தொடர்பில் அவ­ருக்கு நேர­டி­யா­கவும் மறை­மு­க­மா­கவும் உதவி செய்த அத்­தனை சந்­தேக நபர்­க­ளையும் கைது செய்ய குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சிறப்பு விசா­ரணைக் குழு விசா­ர­ணை­களை  தீவி­ரப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இது தொடர்பில் ஏற்­க­னவே வட­மா­கா­ணத்தில் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித ஜய­சிங்க கைது செய்­யப்­பட்டு பிணையில் உள்ள நிலை­யி­லேயே இந்த விசா­ர­ணைகள் தீவி­ரப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

அதன்­படி யாழ்ப்­பாணம் சென்ற குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சமூக கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி விசேட விசா­ர­ணை­யாளர் பொலிஸ் பரி­சோ­தகர் நிஷாந்த சில்வா தலை­மை­யி­லான சிறப்புக் குழு, யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ரா­ஜா­விடம் விசேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சாணி அபே­சே­க­ரவின் மேற்­பார்­வையில் உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர் பி.ரே.திசே­ரவின் ஆலோ­ச­னை­க­ளுக்கு அமை­வாக இந்த விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. 

இதன்போது சுவிஸ்குமார் தப்பிச் சென்ற விவ­காரம் தொடர்பில் தற்­போதும் தேடப்­பட்­டு­வரும் யாழ். பொலிஸ் நிலை­யத்தில் அப்­பொ­ழுது கட­மை­யாற்­றிய முன்னாள் உப­ பொலிஸ் பரி­சோ­தகர் ஸ்ரீக­ஜனின் வீட்­டையும் விசேட சி.ஐ.டி. குழு சுற்றி வளைத்து தேடுதல் நடத்­தி­யது. 

எனினும் இதன்­போது அவர் அங்­கி­ருக்­க­வில்லை எனவும், பெரும்­பாலும் சட்ட விரோ­த­மாக நாட்டை விட்டு அவர் தப்பிச் சென்று இருப்­ப­தற்­கான வாய்ப்­புகள் உள்­ள­தா­கவும் விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­கா­ரி­யொ­ருவர் கேச­ரி­யிடம் தெரி­வித்தார். 

நேற்று முன்­தி­னமே சுவிஸ்குமார் தப்­பித்த விவ­கா­ரத்தில் மாவை சேனா­தி­ராஜா எம்.பி.யிடம் விசா­ர­ணைகள் நடத்­தப்­பட்­டுள்­ள­துடன்,  விசே­ட­மாக முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜய­சிங்­க­வுக்கும் அவ­ருக்கும் இடை­யி­லான தொடர்­புகள் வித்தியா படு­கொ­லையின் பின்னர் ஊர்­கா­வற்றுறையில் பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்க, கொழும்பு பல்­க­லைக்க­ழ­கத்தின் சட்­டபீட விரி­வு­ரை­யாளர் தமிழ் மாறன் உள்­ளிட்­டோ­ருடன் சேர்ந்து நடத்­திய விசேட மக்கள் சந்­திப்பு தொடர்பில் இவ்­வி­சா­ர­ணை­களில் அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. 

இத­னை­விட தப்­பி­ச்செல்ல முற்­பட்ட சுவிஸ்­கு­மாரை பொதுமக்கள் கட்டி வைத்­தி­ருந்த போது அங்கு இடம்­பெற்­றி­ருந்த சம்­ப­வங்­களை ஒளிப்­ப­திவு செய்த தொலைக்­காட்சி ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரின் சாட்­சியம் உள்­ளிட்ட மேலும் பல சாட்­சி­யங்­க­ளையும் வாக்­கு­மூ­லங்­க­ளையும் விசேட பொலிஸ் குழு பதிவு செய்­துள்­ளது. 

அத்­துடன் பிறிதொரு குற்­றச்­சாட்டு தொடர்பில் சிறை­யி­லுள்ள பொலிஸ் அதி­கா­ரி­யான சிந்­தக பண்­டார, சுவிஸ்குமார் ஆகி­யோ­ரிடம் சிறைச்­சா­லைக்குள் வைத்து விசேட விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கவும் குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவின் சிறப்­புக்­குழு ஊர்­கா­வற்­றுறை நீதி­வானின் அனுமதியையும் பெற்றுக்கொண்டுள்ளது. 

இந்நிலையில் சுவிஸ்குமார் தப்பிச் சென்ற விவகாரத்தில் மேலும் சில முக்கிய நபர்களிடம் விசாரணைகள் நடத்தப்படவுள்ள தாகவும் விரைவில் அதனோடு தொடர்பு டைய சந்தேக நபர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் எனவும் விசாரணைகளுக்கு பொறுப்பான உயர் அதிகாரியொருவர் சுட் டிக்காட்டினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33