இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்படவில்லை என மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார் .
புலம் பெயர் நாடுகளில் அகதி தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களை திருப்பி அனுப்பும் நடவடிக்கை தொடர்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கிய இலங்கையின் எப்பகுதியிலும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்படவில்லை. இந்நிலையில் மேற்குலக நாடுகளில் அகதி தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்படும் ஈழத்தமிழர்களை திருப்பியனுப்புவதென்பது அந்தந்த நாடுகள் கடைப்பிடித்துவரும் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை சார்ந்த கொள்கைகளையும் கோட்பாடுகளையும் கேள்விக்குள்ளாக்குவதாகவே அமையும்.
கடந்த ஆட்சிக்காலங்களில் நடைபெற்று வந்த தமிழர்களுக்கு எதிரான அச்சுறுத்தல் நிலையானது இன்று மறைமுகமான வகையில் அதே வீச்சோடு தொடர்ந்து வருகின்றது. போரிற்கு பின்னரான காலத்தில் தமிழர் தாயகத்தில் வாழ்ந்து வரும் மக்கள் அந்த சூழலுக்கு தக்கவாறு தம்மை தக்கவைத்துக்கொண்டு வாழப்பழகிக் கொண்டுள்ளார்கள்.
இருந்தும் அன்றாடம் ஏற்படும் அரசியல் மற்றும் உரிமைப் பிரச்சினைகள் குறித்த சாத்வீகப் போராட்டங்களில் முன்நின்று செயற்படுபவர்களை இலக்குவைத்து இல ங்கை இராணுவ கட்டமைப்பில் உள்ளவர்களால் நேரடியாகவும் மறைமுகமாகவுமான அச்சுறுத்தல் நடவடிக்கைகள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தம்சார்ந்த மக்கள் சமூகத்தின் மீதான அக்கறையின்பாற்பட்டு செயற்படுபவர்களைக்கூட அச்சுறுத்தும் போக்கானது ஜனநாயக விரோதப்போக்கின் வெளிப்பாடாகும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. அவர்களும் இலங்கை இராணுவம் மற்றும் புலனாய்வுத் துறையினரால் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருவதுடன் தொடர் கண்காணிப்பிற்குள்ளாக்கப்பட்டும் வருகின்றனர்.
அண்மையில் இலங்கைக்கு உத்தியோ கபூர்வ விஜயத்தினை மேற்கொண்ட ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் பப்லோ டி கிரீப்பின் மதிப்பீட்டின் அடிப்படையிலான பரிந்துரைகளில், மனித உரிமை காப்பாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் முக்கியமாக பெண்கள் ஆகிய தரப்பினர் மீதான பாதுகாப்பு தரப்பின் கண்காணிப்பு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என காட்டமாக குறிப்பிட்டுள்ளதன் மூலம் மேற்படி விடயங்களின் உண்மைத்தன்மை நிரூபணமாகியுள்ளது. இதைவிட, அகதி தஞ்சக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு திருப்பியனுப்பப்படுவோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்தே குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுவரும் சம்பங்கள் தொடர்ந்து வருகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM