''சட்­ட­வி­ரோ­த­மாக செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக விரைவில் சட்­டத்தை நிலை­நாட்­டுவோம்"

Published By: Priyatharshan

04 Nov, 2017 | 02:49 PM
image

கடந்த காலத்தில் சட்­ட­வி­ரோ­த­மாக செயற்­பட்­ட­வர்­க­ளுக்கு  எதி­ராக விரைவில் சட்­டத்தை நிலை­நாட்­டுவோம். அத்­துடன் நாங்கள் வழக்கு நட­வ­டிக்­கை­களின் கோப்­பு­களை மறைக்­க­மாட்டோம் என நீதி மற்றும் வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு அமைச்சர் தலதா அத்­து­கோ­ரள தெரி­வித்தார்.

இரத்­தி­ன­புரி, பலாங்­கொடை பிர­தே­சத் தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரி­விக்­கையில்,

ஆரம்ப நட­வ­டிக்­கை­யாக நாட்டில் சுதந்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக 2015 ஜன­வரி 8ஆம் திகதி மக்­க­ளுக்கு வாக்­கு­று­தி­ய­ளித்­தி­ருந்தோம்.  அத்­துடன் 19ஆம் திருத்­தச்­சட்­டத்­தி­னூ­டாக ஊடக சுதந்­திரம், நீதி­மன்ற சுயா­தீ­னத்­தன்மை, ஜன­நா­யக உரிமை மற்றும் அரச சேவையின் சுதந்­திரம் என்­ப­வற்றை மேற்­கொள்ள முடி­யு­மா­கி­யுள்­ளது. இன்று யார் வேண்­டு­மா­னாலும் வீதிக்­கி­றங்கி போரா­டி­னாலும் அதற்கு சுதந்­திரம் வழங்­கி­யி­ருப்­பது ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் என்­பதை மறக்­கக்­கூ­டாது.

கடந்த காலத்தில் போராட்டம் மேற்­கொண்­ட­வர்கள் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் செய்து கொலை செய்­தார்கள். மீன­வர்­களின் நிவா­ர­ணங்­களை இல்­லா­ம­லாக்க வேண்டாம் என தெரி­வித்து சிலாபம் மக்கள் வீதிக்­கி­றங்­கி­ய­போது அன்­டனி பெர்­னாண்­டோவுக்கு துப்­பாக்­கி­யி­னால் பதிலளிக்­கப்­பட்­டது. ஆடைத் தொழிற்­சாலை தொழி­லா­ளர்­க­ளுக்கும் துப்­பாக்­கி­யி­னால் பதி­ல­ளித்­தார்கள். ரொஷான் ஷானக்க கொலை செய்­யப்­பட்டார். அதே­போன்று ரது­பஸ்­வ­லவில் நீருக்கு இரசா­யன பொருட்கள் கலக்­கப்­ப­டு­வ­தாக தெரி­வித்­த­போது ரவை­க­ளி­னால் பதி­ல­ளித்­தார்கள். ஊட­க­வி­ய­லா­ளர்­களை கொலை செய்­தார்கள். இவ்­வா­றான சம்­ப­வங்­க­ளுடன் தொடர்புபட்­ட­வர்­க­ளுக்கு எதி­ராக சட்­டத்தை நிலை­நாட்ட விரை­வாக நட­வ­டிக்கை எடுப்போம். இவ்­வாறு இருந்த நாட்­டில்தான் இன்று அனை­வரும் அவர்­க­ளுக்கு தேவை­யான முறையில் நாளாந்தம் போராட்­டங்­களை மேற்­கொள்ளும் உரி­மையை இந்த அர­சாங்கம் பெற்­றுக்­கொ­டுத்­துள்­ளது.

அத்­துடன் நாங்கள் சர்­வ­தே­சத்­துக்கு நல்­ல­தொரு அறி­வித்­தலை கொடுத்­தி­ருக்­கின்றோம். எம்மை சந்­திக்­க­வரும் சர்­வ­தேச பிர­தி­நி­திகள், சுதந்­தி­ரத்­துக்­காக நாங்கள் மேற்­கொண்ட நட­வ­டிக்­கைகள் குறித்து கதைக்­கின்­றனர். மேலும் மஹிந்த ராஜபக் ஷ விருப்­பத்­துடன் தேர்­த­லுக்கு செல்­ல­வில்லை. 2014 ஆம் ஆண்டு நாடு நிதி இல்­லாமல் நெருக்­க­டியை சந்­தித்­தது. அதற்கு முகம்­கொ­டுக்க வழி இல்­லா­மலேயே தேர்­த­லுக்கு சென்றார். எந்த நாடும் எங்­களை கண்­டு­கொள்­ள­வில்லை. பொது­ந­ல­வாய நாடு­களின் மாநாட்டை எமது நாட்டில் நடத்­தும்­போது, எதிர்க்­கட்சித்தலை­வ­ராக இருந்த ரணில் விக்­கிர­ம­சிங்க அந்த மாநாட்­டுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கி­ய­தால்தான்  மாநாட்டை வெற்­றி­க­ர­மாக்­கிக்­கொள்ள முடிந்­தது. கற்­கா­லத்தை  நோக்­கிச்­சென்று கொண்­டி­ருந்த நாட்­டைத்தான் நாங்கள் 2015 ஆம் ஆண்டு மாற்­றி­ய­மைத்தோம்.

எனவே இன்று சுதந்­தி­ரத்தை உறுதிப்

படுத்தி சிறந்த முறையில் வாழும் உரி

மையை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.வழக்கு நடவடிக்கைகளின் கோப்புகளை

நாம் மறைக்கவில்லை  ஊடகவிய லாளர் களை கொலைசெய்யவில்லை ஊழல் மோச

டிகளை நிறுத்தியிருக்கின்றோம். தற்போது நாம் செய்ய வேண்டியிருப்பது மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுப்பதாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36