கடந்த காலத்தில் சட்டவிரோதமாக செயற்பட்டவர்களுக்கு எதிராக விரைவில் சட்டத்தை நிலைநாட்டுவோம். அத்துடன் நாங்கள் வழக்கு நடவடிக்கைகளின் கோப்புகளை மறைக்கமாட்டோம் என நீதி மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
இரத்தினபுரி, பலாங்கொடை பிரதேசத் தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆரம்ப நடவடிக்கையாக நாட்டில் சுதந்திரத்தை ஏற்படுத்துவதாக 2015 ஜனவரி 8ஆம் திகதி மக்களுக்கு வாக்குறுதியளித்திருந்தோம். அத்துடன் 19ஆம் திருத்தச்சட்டத்தினூடாக ஊடக சுதந்திரம், நீதிமன்ற சுயாதீனத்தன்மை, ஜனநாயக உரிமை மற்றும் அரச சேவையின் சுதந்திரம் என்பவற்றை மேற்கொள்ள முடியுமாகியுள்ளது. இன்று யார் வேண்டுமானாலும் வீதிக்கிறங்கி போராடினாலும் அதற்கு சுதந்திரம் வழங்கியிருப்பது ஜனாதிபதியும் பிரதமரும் என்பதை மறக்கக்கூடாது.
கடந்த காலத்தில் போராட்டம் மேற்கொண்டவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து கொலை செய்தார்கள். மீனவர்களின் நிவாரணங்களை இல்லாமலாக்க வேண்டாம் என தெரிவித்து சிலாபம் மக்கள் வீதிக்கிறங்கியபோது அன்டனி பெர்னாண்டோவுக்கு துப்பாக்கியினால் பதிலளிக்கப்பட்டது. ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கும் துப்பாக்கியினால் பதிலளித்தார்கள். ரொஷான் ஷானக்க கொலை செய்யப்பட்டார். அதேபோன்று ரதுபஸ்வலவில் நீருக்கு இரசாயன பொருட்கள் கலக்கப்படுவதாக தெரிவித்தபோது ரவைகளினால் பதிலளித்தார்கள். ஊடகவியலாளர்களை கொலை செய்தார்கள். இவ்வாறான சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நிலைநாட்ட விரைவாக நடவடிக்கை எடுப்போம். இவ்வாறு இருந்த நாட்டில்தான் இன்று அனைவரும் அவர்களுக்கு தேவையான முறையில் நாளாந்தம் போராட்டங்களை மேற்கொள்ளும் உரிமையை இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுத்துள்ளது.
அத்துடன் நாங்கள் சர்வதேசத்துக்கு நல்லதொரு அறிவித்தலை கொடுத்திருக்கின்றோம். எம்மை சந்திக்கவரும் சர்வதேச பிரதிநிதிகள், சுதந்திரத்துக்காக நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து கதைக்கின்றனர். மேலும் மஹிந்த ராஜபக் ஷ விருப்பத்துடன் தேர்தலுக்கு செல்லவில்லை. 2014 ஆம் ஆண்டு நாடு நிதி இல்லாமல் நெருக்கடியை சந்தித்தது. அதற்கு முகம்கொடுக்க வழி இல்லாமலேயே தேர்தலுக்கு சென்றார். எந்த நாடும் எங்களை கண்டுகொள்ளவில்லை. பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை எமது நாட்டில் நடத்தும்போது, எதிர்க்கட்சித்தலைவராக இருந்த ரணில் விக்கிரமசிங்க அந்த மாநாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கியதால்தான் மாநாட்டை வெற்றிகரமாக்கிக்கொள்ள முடிந்தது. கற்காலத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்த நாட்டைத்தான் நாங்கள் 2015 ஆம் ஆண்டு மாற்றியமைத்தோம்.
எனவே இன்று சுதந்திரத்தை உறுதிப்
படுத்தி சிறந்த முறையில் வாழும் உரி
மையை பெற்றுக்கொடுத்திருக்கின்றோம்.வழக்கு நடவடிக்கைகளின் கோப்புகளை
நாம் மறைக்கவில்லை ஊடகவிய லாளர் களை கொலைசெய்யவில்லை ஊழல் மோச
டிகளை நிறுத்தியிருக்கின்றோம். தற்போது நாம் செய்ய வேண்டியிருப்பது மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுப்பதாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM