தீர்வு முயற்சி தோல்வியடைந்தால் சர்வதேசம் தலையிட காரணமேற்படும் : அருட்­தந்தை எம்.ஜே.இம்­மா­னுவேல்

Published By: Priyatharshan

04 Nov, 2017 | 12:50 PM
image

தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்­வினைப் பெறு­வ­தற்கு விரக்­தி­யின்றி இறுதிவரையில் முயற்­சிப்போம். தோல்­வி­ய­டைந்தால் சர்­வ­தேசம் மற்றும்  ஐக்­கிய நாடுகள் சபை தலை­யீ­டு­களைச் செய்­வ­தற்கு போதி­ய­ கா­ரணங்கள் இருக்­கின்ற நிலையில் அர­சாங்கம் எம்மை குறை கூற­மு­டி­யாது என உலகத் தமிழ்ப் பேர­வையின் தலைவர் அருட்­தந்தை எம்.ஜே.இம்­மா­னுவேல் அடி­களார் தெரி­வித்­துள்ளார். 

இலங்­கைக்கு அண்­மையில் விஜயம் செய்து நிலை­மை­களை ஆராய்ந்­தி­ருந்த பின்­ன­ணி­யிலும் புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான வழி­ந­டத்தல் குழுவின் இடைக்­கால அறிக்கை மீதான விவா­தங்கள் இடம்­பெற்று வரு­கின்ற நிலை­யிலும் தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு குறித்து தனது டுவிட்டர் பக்­கத்தில் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

அதில் அவர் மேலும் தெரி­வித்­துள்­ள­தா­வது, 

சுதந்­திர இலங்­கையில் 70 ஆண்­டு­க­ளாக பல­முறை சிங்­க­ள­வர்­களால் ஏமாற்றம் அல்­லது தோல்­வியைக்கண்ட நாம் இம்­முறை ஏன் இறு­தி­வ­ரையில் முயற்­சி­செய்ய வேண்டும். தோல்­வி­ய­டை­கின்­ற­போது அல்­லது ஏமாற்­றப்­ப­டு­கின்­ற­போது சர்வ­தேசம் அல்­லது ஐக்­கிய நாடுகள் சபை தலை­யி­டு­வ­தற்கு நாம் தடை­யாக இருக்க முடி­யாது.

கடந்த தோல்­வி­களின் போது நாமே குற்­ற­வா­ளி­க­ளாகச் சர்­வ­தே­சத்­தி­னாலும் ஐக்­கிய நாடுகள் சபை­யாலும் கணிக்கப்­பட்­ட­தனால்தான் இலங்கை அர­சாங்­கத்­திற்கு எதி­ராக அவர்கள் தலை­யீடு செய்­யாமல் இருந்­த­மைக்­கான கார­ண­மா­கின்­றது. ஆனால் இம்­முறை விரக்­தி­யின்றி நம்­பிக்­கை­யுடன் இறு­தி­வ­ரையில் போராடி முயற்­சிப்போம். 

தோல்வியடைந்தால் அல்லது ஏமாற் றப்பட்டால் சர்வதேசம் மற்றும் ஐக்கிய நாடுகள் தலையிடுவதற்கு போதிய கார ணங்கள் உள்ளன. நம்மை குறை கூறவும் முடியாது என்றுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43