சுதந்திரக் கட்சி தனித்தே போட்டியிடும்

Published By: Priyatharshan

04 Nov, 2017 | 09:38 AM
image

எதிர்­வரும் காலங்­களில் இடம்­பெறும் தேர்­தல்­களில் தமது கட்சி பங்­கா­ளிக்­கட்­சி­களை இணைத்துக்­கொண்டு கை சின்­னத்தில் பல­மிக்க கூட்­ட­ணி­யாக போட்­டி­யிடதீர்­மா­னித்­துள்­ள­தாக ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி அறி­வித்­துள்­ளது. 

விரைவில் இடம்­பெ­ற­வுள்ள உள்ளூ­ராட்­சி­ மன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்­வ­தற்­கான ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் நேற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில், ஜனா­தி­பதி மாளி­கையில் இடம்­பெற்­றது. 

இதன் போதே இந்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக கட்­சியின் ஊட­கப்­பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான   திலான் பெரேரா மற்றும் விளை­யாட்­டுத்­துறை அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தெரி­வித்­தனர்.

கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூட்டம் தொடர்­பாக கட்­சியின் செய­லாளர் துமிந்த திஸா­நா­யக்க கருத்து தெரி­விக்­கையில்,  

 எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யாக   பல­மிக்க கூட்­ட­ணி­யாக போட்­டி­யி­டு­வ­தற்கே எதிர்­பார்க்­கின்றோம். இந்த கூட்­டத்­துக்கு கூட்டு எதிர்க்­கட்­சியில் இருக்கும் எமது கட்சி உறுப்­பி­னர்கள் அனை­வ­ருக்கும் எழுத்து மூலம் அழைப்பு விடுத்­தி­ருந்தேன். 

அத்­துடன் ஐக்­கிய தேசிய கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியும் இணைந்து அர­சாங்கம் செய்­தாலும் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் இணைந்து போட்­டி­யி­டப்­போ­வ­தில்லை சுதந்திரக்கட்சி எதிர்வரும் தேர்தல்களில் தனித்தே கை சின்னத்தில் போட்டியிடும் என்றார்.

இதேவேளை இது தொடர்­பாக  அமைச்சர்களான  தயாசிறிஜயசேகர மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் தெரி­விக்­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூட்டம் கட்­சியின் தலைவர் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் நேற்று இடம்­பெற்­றது. இதன்­போது எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் தொடர்­பாக விரி­வாக ஆரா­யப்­பட்­டது. குறிப்­பாக தேர்­தலில் எந்த சின்­னத்தில் போட்­டி­யி­டு­வது தொடர்­பா­கவும் தொகுதி வாரி­யாக இந்த தேர்தல் இடம்­பெ­ற­வுள்­ளதால் பொருத்­த­மான வேட்­பா­ளர்­களை நிய­மிப்­பது தொடர்­பா­கவும் கலந்­து­ரை­யா­டப்­பட்­டது.

அத்­துடன் எதிர்­வரும் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் பங்­கா­ளிக்­கட்­சி­க­ளுடன் கூட்­டி­ணைந்து பல­மிக்க கட்­சி­யாக போட்­டி­யி­டு­வ­தற்கு தேவை­யான நட­வ­டிக்­கை­களை எதிர்­வரும் தினங்­களில் மேற்­கொள்­ள­வது தொடர்­பா­க­வும்­ஆ­ரா­யப்­பட்­டது. அத்­துடன் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்கள் தொடர்­பாக கூட்­டத்­தின்­போது எந்­த­வித பேச்சும் இடம்­பெ­ற­வில்லை என்றனர்.  

இதே­வேளை, ஜனா­தி­பதி தலை­மையில் நேற்று இடம்­பெற்ற கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக்­கூட்­டத்­துக்கு  வரு­மாறு கூட்டு எதிர்க்­கட்­சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி உறுப்­பி­னர்­க­ளுக்கு கட்­சியின் செய­லாளர்  துமிந்த திஸா­நா­யக்க  அழைப்பு விடுத்­தி­ருந்­த­போதும் அவ­ரி­களில் யாரும் கலந்­து­கொள்­ள­வில்லை என்­ப­துடன் கூட்டு எதிர்க்­கட்­சியில் அங்கம் வகிக்கும்  மஹிந்த ராஜபக்ஷ் உள்­ளிட்ட அவ­ரது அணியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 42 பேரின் கைச்­சாத்­து­ட­னான கடிதம் ஒன்றும் நேற்­று­முன்­தினம்  கட்­சியின் பொது­செ­ய­லாளர் துமிந்த திஸா­நா­யக்­க­விற்கு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருந்­தது.

அதில், தேசிய அர­சாங்­கத்தில் இருந்து சுதந்­திர கட்சி வில­குதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், அர­சியல் யாப்பு உருவாக்கும் பணியில் இருந்து விலகுதல், பிணை முறி விநியோக மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 7 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே இணைந்துசெயற்படுவது தொடர்பாக ஆராயலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04