எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் தேர்தல்களில் தமது கட்சி பங்காளிக்கட்சிகளை இணைத்துக்கொண்டு கை சின்னத்தில் பலமிக்க கூட்டணியாக போட்டியிடதீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அறிவித்துள்ளது.
விரைவில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஆராய்வதற்கான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழுக் கூட்டம் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.
இதன் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கட்சியின் ஊடகப்பேச்சாளரும் அமைச்சருமான திலான் பெரேரா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் தெரிவித்தனர்.
கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் தொடர்பாக கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில்,
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக பலமிக்க கூட்டணியாக போட்டியிடுவதற்கே எதிர்பார்க்கின்றோம். இந்த கூட்டத்துக்கு கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் எமது கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் எழுத்து மூலம் அழைப்பு விடுத்திருந்தேன்.
அத்துடன் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இணைந்து அரசாங்கம் செய்தாலும் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடப்போவதில்லை சுதந்திரக்கட்சி எதிர்வரும் தேர்தல்களில் தனித்தே கை சின்னத்தில் போட்டியிடும் என்றார்.
இதேவேளை இது தொடர்பாக அமைச்சர்களான தயாசிறிஜயசேகர மற்றும் டிலான் பெரேரா ஆகியோர் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக தேர்தலில் எந்த சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பாகவும் தொகுதி வாரியாக இந்த தேர்தல் இடம்பெறவுள்ளதால் பொருத்தமான வேட்பாளர்களை நியமிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பங்காளிக்கட்சிகளுடன் கூட்டிணைந்து பலமிக்க கட்சியாக போட்டியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ளவது தொடர்பாகவும்ஆராயப்பட்டது. அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக கூட்டத்தின்போது எந்தவித பேச்சும் இடம்பெறவில்லை என்றனர்.
இதேவேளை, ஜனாதிபதி தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்துக்கு வருமாறு கூட்டு எதிர்க்கட்சியில் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க அழைப்பு விடுத்திருந்தபோதும் அவரிகளில் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பதுடன் கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் மஹிந்த ராஜபக்ஷ் உள்ளிட்ட அவரது அணியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் 42 பேரின் கைச்சாத்துடனான கடிதம் ஒன்றும் நேற்றுமுன்தினம் கட்சியின் பொதுசெயலாளர் துமிந்த திஸாநாயக்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது.
அதில், தேசிய அரசாங்கத்தில் இருந்து சுதந்திர கட்சி விலகுதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல், அரசியல் யாப்பு உருவாக்கும் பணியில் இருந்து விலகுதல், பிணை முறி விநியோக மோசடியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட 7 நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளுக்கு இணக்கம் தெரிவித்தால் மாத்திரமே இணைந்துசெயற்படுவது தொடர்பாக ஆராயலாம் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM