தோழியின் காதலனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவிகள்

Published By: Digital Desk 7

02 Nov, 2017 | 03:38 PM
image

சப்ரகமுவ மாகாணத்தில் அமைந்துள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில்  தரம் பதினொன்றில் கல்வி கற்கும் மாணவிகள் தனது உயிர்த் தோழியின் காதலனை வீடு தேடிச் சென்று மிரட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மகளிர் பாடசாலையில் தரம் பதினொன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மணவர் ஒருவரை காதலித்துள்ளார்.

குறித்த இரு மாணவர்களதும் காதல் தொடர்பில் கடந்த ஒரு மாதமாக விரிசல் ஏற்படவே மாணவன் மாணவியுடன் பேசுவதை நிறுத்தியுள்ளான்.

காதலன் தன்னோடு பேசாத காரணத்தால் மனமுடைந்த காதலி பல நாட்களாக பாடசாலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார்.

தனது உயிர்த் தோழி பாடசாலைக்கு வராமைக்கான காரணம் அறிந்த ஏனைய நான்கு தோழிகளும் தங்களது உயிர்த் தோழியின் காதலனது வீட்டை தேடி பிடித்து சென்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தங்களது தோழி மிகவும் மனமுடைந்து வருத்தத்தில் இருப்பதாகவும் மீண்டும் அவளுடனான காதல் தொடர்பை ஆரம்பிக்குமாறும் அவ்வாறு அவளுடன் செய்யாவிடின் அடியாட்களை கூட்டி வந்து குறித்த காதலனை கொலை செய்து விடுவதாகவும் அச்சுறுத்தியுள்ளனர்.

கொலை மிரட்டல் தொடர்பாக குறித்த காதலன் கேகாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டைத் தொடர்ந்து குறித்த விடயத்தோடு தொடர்பு பட்ட காதலி உட்பட ஐந்து மாணவிகளையும் காதலனையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து அறிவுரைகள் கூறி சமாதானப்படுத்தி வழக்குப் பதிவுகள் எதுவும் செய்யாது அனுப்பி வைத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை - சீன நட்புறவு என்றும்...

2025-03-25 18:26:23
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கு விளக்கமறியல் 

2025-03-25 18:22:02
news-image

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது!

2025-03-25 17:31:19
news-image

நால்வர் மீதான தடை குறித்த பிரித்தானிய...

2025-03-25 17:40:02
news-image

செங்கலடியில் மலசல கூடத்தில் உணவு தயாரித்து...

2025-03-25 17:09:47
news-image

முச்சக்கரவண்டியிலிருந்து ஹெரோயின் போதைப்பொருள் கண்டெடுப்பு :...

2025-03-25 17:04:04
news-image

நான்கு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2025-03-25 17:01:14
news-image

19 வயதில் கைதுசெய்யப்பட்ட இருவர் 30...

2025-03-25 16:57:39
news-image

கொழும்பு - கண்டி வீதியில் விபத்து...

2025-03-25 16:16:22
news-image

கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தான் தேசிய தின...

2025-03-25 17:11:15
news-image

புதிய கிராம அலுவலரை நியமிக்குமாறு கோரி...

2025-03-25 16:14:00
news-image

கிராண்ட்பாஸ் துப்பாக்கிச் சூடு ; பிரதான...

2025-03-25 16:02:08