பறிபோனது கீதாவின் பதவி!

Published By: Devika

02 Nov, 2017 | 01:33 PM
image

இரட்டைப் பிரஜாவுரிமையை வைத்திருக்கும் கீதா குமாரசிங்க பாராளுமன்ற அங்கத்தவராகப் பதவி வகிக்க முடியாது என மீயுயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (2) இத்தீர்ப்பை வழங்கியுள்ளது.

நடிகையும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கீதா குமாரசிங்க, இலங்கை மற்றும் சுவிட்ஸர்லாந்து ஆகிய நாடுகளின் குடியுரிமையை வைத்திருப்பதால் அவர் பாராளுமன்ற உறுப்பினராகச் செயற்பட முடியாது என வழக்குத் தொடரப்பட்டிருந்தது.

இதை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இலங்கை அரசியலமைப்பு விதிமுறைகளின் அடிப்படையில் கீதா குமாரசிங்கவை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது.

இதை எதிர்த்து கீதா குமாரசிங்க மீயுயர் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இது குறித்த விசாரணைகள் நேற்று (1) நிறைவுபெற்றன. அதன்படி, அவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது.

அதில், மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவை உறுதிப்படுத்திய ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு, கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகிக்க முடியாது எனத் தீர்ப்பளித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2025-03-17 06:34:21
news-image

கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில்...

2025-03-17 05:07:05
news-image

விஜயகுமாரதுங்க உட்பட முக்கிய படுகொலை அறிக்கைகளை...

2025-03-17 04:56:54
news-image

பட்டலந்த சித்திரவதை சம்பவம் ஏற்படுத்திய சர்ச்சை...

2025-03-17 05:00:32
news-image

ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட வேண்டும்;...

2025-03-17 04:49:16
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை : ...

2025-03-17 04:45:11
news-image

ஜே.வி.பி. செய்த கொலைகளை மறைப்பதற்கு இடமளிக்கக்...

2025-03-16 16:20:41
news-image

அமைச்சர் நளிந்த வரலாற்றை மறந்துவிட்டார் :...

2025-03-16 20:34:58
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழு அறிக்கை :சட்டமா...

2025-03-16 17:16:42
news-image

நாடளாவிய ரீதியில் அரச தாதியர் சங்கத்தினர்;...

2025-03-16 22:15:49
news-image

அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பாதாளக்...

2025-03-16 17:16:18
news-image

வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும்...

2025-03-16 21:24:04