கம்பஹா பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கையின்போது, 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கம்பஹா தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் முதித்த புஸ்ஸெல்ல மற்றும் கம்பஹா தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் லக்ஷ்மன் பண்டார ஆகியோரின் ஆலோசனையின் பேரில், கம்பஹா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இத்திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டிருந்தனர்.
இச்சுற்றி வளைப்பின்போது, கம்பஹா மாவட்டத்திற்கு பாரியளவில் ஹெரோயின் போதைப்பொருள் விநியோகித்து வரும் இருவரையும், இவர்களிடமிருந்து போதைப்பொருளை விற்பனைக்காக வாங்கிச் செல்லும் 25 பேரையும் கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கம்பஹா மல்வத்து ஹிரிபிட்டிய பிரதேசத்திலிருந்து கைது செய்யப்பட்டுள்ள குறித்த 27 பேரும், கம்பஹா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM