தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும் யாழ்ப்பாண பல்கலைக் கழக மாணவர்கள் நடாத்தி வருகின்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கிறது.
கொட்டும் மழைக்கு மத்தியில் மாணவர்களும், பல்கலைக்கழக ஊழியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிறைச்சாலையில் பல வருடங்களாக எந்த விதமான விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படல் வேண்டும்.
உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் நியாய பூர்வமான கோரிக்கைகளை செவிசாய்த்து உடன் தீர்வு காணப்படல் வேண்டும்.
சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் அவல நிலை உணர்ந்து பொறுப்புக் கூற வேண்டிய தமிழ் அரசியல் தலைமைகள் அசமந்தப் போக்கினைக் கைவிட்டு உரிய தரப்பிடம் அழுத்தங்கைப் பிரயோகித்து கைதிகளின் விடுதலை விடயத்தில் பொறுப்புக் கூறல் வேண்டும். ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக் கழக சமூகத்தினால் இந்தப் போராட்டம் நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM