கடற்கரையில் நடைபயின்ற ஒக்டோபஸ்கள்! (காணொளி)

Published By: Devika

29 Oct, 2017 | 10:35 AM
image

வேல்ஸ் கடற்கரையில் இருபதுக்கும் மேற்பட்ட ‘ஒக்டோபஸ்’கள் நடை பயின்ற காட்சி அப்பகுதிவாசிகளை ஆச்சரியத்துக்குள்ளாக்கியுள்ளது.

இந்த ஒக்டோபஸ்கள் நேற்றிரவு கடற்கரையில் இருந்து கடல் நோக்கிச் சென்றதாக நேரில் கண்டவர்கள் கூறியுள்ளனர். மேலும், இரவு நேரமாகையால் கண்ணுக்குத் தெரிந்த ஒக்டோபஸ்களை கடலில் விட்டுக் காப்பாற்றியுள்ளனர்.

எனினும், இன்று காலை அதே கடற்கரையோரத்தில் பல ஒக்டோபஸ்கள் உயிரிழந்த நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபஸ்கள் ஏன், எப்படி கரைக்கு வந்தன என்பது இன்னும் மர்மமாகவே இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right