பதுளை மாவட்டத்தில் 23 பாடசாலைகள் மண் சரிவிற்குள்ளாகும் அபாயப் பகுதிகளில் இருப்பதாக தேசிய கட்டட ஆய்வகம், ஊவா மாகாண சபைக்கு அறிவித்துள்ளது.
சபையின் பிரதித் தலைவர் விமலதாச கலங்கமராய்ச்சி தலைமையில், ஊவா மாகாண சபை மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றகூட்டத்தின் போதே , சபை பிரதித்தலைவரினால் மேற்கண்ட விபரம் அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய பதுளை- தெல்பத்தை வள்ளுவர் தமிழ் வித்தியாலயம் மற்றும் கலைமகள் தமிழ் வித்தியாலயம், பசறையூர் தமிழ் வித்தியாலயம், பதுளை தியனாகலை தமிழ் வித்தியாலயம், ஹாலி-எலை- மே மலை தமிழ் வித்தியாலயம், கோபோ தமிழ் வித்தியாலயம், வெலிமடை விஜய வித்தியாலயம், வெவேகம வித்தியாலயம், பசறை-ரகுபொல முஸ்லிம் வித்தியாலயம், கனவரல்லை இலக்கம் 3 தமிழ் வித்தியாலயம், கோணக்கலை தமிழ் வித்தியாலயம், கனவரல்லை இலக்கம் 1 தமிழ் வித்தியாலயம், ஹல்துமுல்லை -வல்ஹப்புதென்ன மத்திய மகா வித்தியாலயம், மீரியபெத்தை தமிழ் வித்தியாலயம், உடவேறியா தமிழ் வித்தியாலயம், ககாகொல்ல தமிழ் வித்தியாலயம், பிங்கராவை தமிழ் வித்தியாலயம், கினலன் தமிழ் வித்தியாலயம், ரொசட் தமிழ் வித்தியாலயம், லியங்காவெல தமிழ் வித்தியாலயம், வேவெஸ்ஸ ஸ்ரீ இராம கிருஷ்ணா தமிழ் வித்தியாலயம், லுணுகல அல் - அமீன் வித்தியாலயம், பண்டாரவளை- மகுல்எல்ல வித்தியாலயம் ஆகியனவே மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ள பகுதிகளிலுள்ள பாடசாலைகளாகும்.
இவற்றில் 18 பாடசாலைகள் தமிழ்ப் பாடசாலைகளாகவும், இரண்டு முஸ்லிம் பாடசாலைகளாகவும், மூன்று சிங்கள பாடசாலைகளாகவுமாக 23 பாடசாலைகள் மண்சரிவு ஏற்படும் அபாயப் பகுதியில் அடங்கியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM