16 வயதுக்கு குறைந்த சிறுமியை காதலித்து பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்திய குற்றத்திற்காக முல்லைத்தீவு இளைஞனொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
முல்லைத்தீவு, மாங்குளம், ஒலுமடு பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய நாகராசா ஜெகதீஸ்வரன் என்ற இளைஞன், 2011 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் சிறுமி ஒருவரை காதலிப்பதாக கூறி அவரை காதலித்து ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி ஒரு குழந்தைக்கு தாயாக்கியுள்ளார்.
இதனையடுத்து குறித்த இளைஞன் தன்னை திருமணம் முடிப்பார் என காத்திருந்த பெண் அவர் வேறு திருமணம் முடித்து விட்டார் என்பதனை அறிந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டினையடுத்து குறித்த நபரை கைது செய்த முல்லைத்தீவு பொலிஸார் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தியிருந்தனர்.
வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று கடந்த 24.08.2017 ஆம் திகதியன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வு பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று சாட்சியங்கள் மன்றினால் பரிசீலிக்கப்பட்டு நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் குறித்த இளைஞன் 16 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளையை காதலிப்பதாக தெரிவித்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமைக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்பபளிக்கப்பட்டது. அத்துடன் பிறந்த குழந்தைக்கு மூன்று இலட்சம் ரூபா நஸ்டஈடு செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தண்டப்பணமாக பத்தாயிரம் ரூபாவை செலுத்துமாறும் அதை செலுத்த தவறின் ஒரு மாத சாதாரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவ் வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM