காத­லித்து ஏமாற்­றிய இளை­ஞ­னுக்கு 10 வருட கடூ­ழிய சிறைத்தண்டனை

Published By: Priyatharshan

28 Oct, 2017 | 08:43 AM
image

16 வய­துக்கு குறைந்த சிறுமியை காத­லித்து பாலியல் வல்லு றவுக்கு உட்படுத்திய குற்­றத்­திற்­காக முல்­லைத்­தீவு இளை­ஞ­னொ­ரு­வ­ருக்கு வவு­னியா மேல் நீதி­மன்றம் நேற்று 10 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை வி­தித்து தீர்ப்­ப­ளித்­தது.

முல்­லைத்­தீவு, மாங்­குளம், ஒலு­மடு பிர­தே­சத்தைச் சேர்ந்த 23 வய­து­டைய நாக­ராசா ஜெக­தீஸ்­வரன் என்ற இளைஞன், 2011 ஆம் ஆண்டு ஜூலை மற்றும் நவம்பர் மாதங்களில் சிறுமி ஒரு­வரை காத­லிப்­ப­தாக கூறி அவரை காத­லித்து ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி ஒரு குழந்­தைக்கு தாயாக்­கி­யுள்ளார். 

இத­னை­ய­டுத்து குறித்த இளைஞன் தன்னை திரு­மணம் முடிப்பார் என காத்­தி­ருந்த பெண் அவர் வேறு திரு­மணம் முடித்து விட்டார் என்­ப­தனை அறிந்து பொலிஸில் முறைப்­பாடு செய்­துள்ளார்.

இந்த முறைப்­பாட்­டி­னை­ய­டுத்து குறித்த நபரை கைது செய்த முல்­லைத்­தீவு பொலிஸார் நீதிவான் நீதி­மன்­றத்தில் முற்­ப­டுத்­தி­யி­ருந்­தனர்.

வழக்கு விசா­ர­ணைகள் முல்­லைத்­தீவு நீதிவான் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்று கடந்த 24.08.2017 ஆம் திக­தி­யன்று சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்­தினால் குற்­றப்­ப­கிர்வு பத்­திரம் வவு­னியா மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்டு வழக்கு விசா­ர­ணைகள் இடம்­பெற்று சாட்­சி­யங்கள் மன்­றினால் பரி­சீ­லிக்­கப்­பட்டு நேற்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

இதன் பிர­காரம் குறித்த இளைஞன் 16 வய­துக்­குட்­பட்ட பெண் பிள்­ளையை காத­லிப்­ப­தாக தெரி­வித்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியமைக்கு 10 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை விதித்து தீர்­ப­ப­ளிக்­கப்­பட்­டது. அத்­துடன் பிறந்த குழந்­தைக்கு மூன்று இலட்சம் ரூபா நஸ்­ட­ஈடு செலுத்­து­மாறும் அதை செலுத்த தவறின் 2 வருட கடூ­ழிய சிறைத்­தண்­டனை அனு­ப­விக்க நேரிடும் எனவும் தண்­டப்­ப­ண­மாக பத்­தா­யிரம் ரூபாவை செலுத்­து­மாறும் அதை செலுத்த தவறின் ஒரு மாத சாதா­ரண சிறைத்தண்டனையும் அனுபவிக்க நேரிடும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கில் அரச தரப்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் வழக்கினை நெறிப்படுத்தியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51