மத்திய பா.ஜ.க அரசின் திட்டங்களினால் மக்கள் படும் அவதிகளை மெர்சல் திரைப்படத்தில் வெளிக்காட்டியமையால் பா.ஜ.க. வினர் அத்திரைப்படத்துக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இது தேசிய ரீதியில் பேசும் பொருளாக மாறியது. இந்நிலையில் பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா விஜயின் பெயரை ஜோசப் விஜய் என்று குறிப்பிட்டு அவருக்கு மதச்சாயம் பூசும் முயற்சியில் ஈடுபட்டார் . ஜோசப் விஜய் என்று கூறி மத ரீதியாக தாக்குதல் நடத்தினார். விஜயின் பெயர் ஜோசப் விஜய் என்று பொதுவாக யாருக்கும் தெரியாத நிலையில் விஜயின் வாக்காளர் அட்டை உள்ளிட்ட சில ஆவணங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு விஜயை கிறிஸ்துவர் என்று ராஜா விமர்சித்தார். இதற்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் பா.ஜ.க. வினரின் எதிர்மறை கருத்தே படத்தை மாபெரும் வெற்றிடப்படமாக மாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மக்களும், ரசிகர்களும் மெர்சலுக்கு அமோக ஆதரவை வழங்கி படத்தை வெற்றி பெறச் செய்துவிட்டனர். இந்நிலையில் இதுவரை மௌனமாக இருந்த விஜய் பா.ஜ.க.வினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் படம் வெற்றி பெற்றதற்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதில் விஜய் தனது பெயரை ஜோசப் விஜய் என்றே குறிப்பிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் விஜய் கூறியிருப்பதாவது:
மெர்சல் படம் தீபாவளி விருந்தாக வெளியாகி மக்களின் பாராட்டுகளுடன், நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மெர்சல் திரைப்படத்துக்கு சில எதிர்ப்புகள் வந்தன.
இதற்கு பதில் அளிக்கும் வகையில் என் திரையுலக நண்பர்களான நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், திரையுலக அமைப்புகளான நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், தேசிய அளவில் பிரபலமான அரசியல் தலைவர்கள், மாநில கட்சிகளின் தலைவர்கள், கட்சி பிரதிநிதிகள், பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம், பண்பலையைச் சேர்ந்த ஊடக நண்பர்கள், எனது நண்பர், நண்பிகள் (ரசிகர், ரசிகைகள்), பொதுமக்கள் அனைவரும் எனக்கும் மெர்சல் படக் குழுவினருக்கும் மிகப் பெரிய ஆதரவு தந்தார்கள்.
மேலும் மெர்சல் திரைப்படத்தை மாபெரும் வெற்றி பெறச் செய்ததற்கும், ஆதரவு கொடுத்ததற்கும் அனைவருக்கும் இத் தருணத்தில் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-நன்றி கலந்த வணக்கத்துடன்
உங்கள் விஜய்.மேலும், தன் முழுப் பெயரான ஜோசப் விஜய் என்ற பெயரிலேயே இந்த அறிக்கையைத் தந்துள்ளார். குறித்த அறிக்கை யின் தலைப்பில் ஜீசஸ் சேவ்ஸ் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM