இலங்கையின் ஒரு தனி அலகாகவே கொழும்பு சர்வதேச நிதி நகர் (போர்ட் சிட்டி) அமைக்கப்பட்டு வருகின்றது. 2040 ஆம் ஆண்டில் இது பூரணத்து வமடையும். இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கும் நிதி நகரில் இடம் உண்டு என அரசாங்கம் அறிவித்துள்ளது.
கொழும்பு சர்வதேச நிதி நகரின் எல்லை நிரைப்பு பணிகளின் 50 வீதம் நிறைவுபெற்றுள்ளது, எதிர்வரும் 2019 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மண் நிரைப்பு பணிகள் முடிவு பெரும் என அரசாங்கம் கூறியுள்ளது.
மேல்மாகாண மற்றும் பாரிய நகர அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க நேற்று நிதி நகரை பார்வையிட சென்றதுடன் ஊடக சந்திப்பொன்றையும் அங்கு நடத்தியிருந்தார். இதன்போது அவர் குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
கொழும்பு துறைமுக நகரை உருவாக்க முற்பட்டபோது பல்வேறு பிரச்சினைகள் எழுந்தன. இயற்கை பிரச்சினைகள், எல்லை பிரச்சினைகள் என பல்வேறு சிக்கல்கள் காணப்பட்ட நிலையில் அவை அனைத்திற்கும் தீர்வு காண்டு இந்த திட்டத்தினை உருவாக்கி வருகின்றோம். இப்போதும் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை இனங்கண்டு தீர்வுகளை வழங்கி வருகின்றோம். இன்று நகர் அபிவிருத்திகளின் அடிப்படையில் பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுக்கபட்டு வருகின்றன. இன்று சிங்கப்பூர், கொங்கொங், துபாய் ஆகிய நாடுகளை எடுத்துக்கொண்டால் அவற்றின் வெற்றிக்கும் இவ்வாறான திட்டங்களே காரணமாகும். அத்துடன் கொழும்பு துறைமுகம் நிதி நகரை அண்மித்து அமைந்துள்ள காரணத்தினால் துறைமுக அபிவிருத்தியினை மேலும் பலப்படுத்தவும் இது பாரிய வாய்ப்பாக அமையும். அத்துடன் நிலக்கீழ் பாதைகள் மற்றும் மேம்பாலங்கள் ஆகியவற்றை அமைக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. கொழும்பு, கொள்ளுப்பிட்டி, துறைமுக நகர் பகுதிகளை இணைத்த புகையிரத சேவைகளும் உருவாக்கப்படவுள்ளன. இதனால் வாகன நெரிசலையும் குறைக்க முடியும். மேலும் பல்வேறு நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க தயாராக உள்ளோம். கொழும்பினை இணைக்கும் வேலைத்திட்டமாகவே நாம் இதனைக் கருதுகின்றோம்.
இந்த துறைமுக நகர் உருவாக்கத்தின் போது நீர், மின்சாரம் வழங்கும் நடவடிகைகளையும் இலங்கை அரசாங்கம் மற்றும் சீன நிறுவனம் இணைந்து முன்னெடுக்கவுள்ளன. குப்பை அகற்றும் திட்டங்களும் இதில் உள்ளடங்குகின்றது. நகரின் குப்பைகளை கொழும்பில் சேர்க்கப்போவதில்லை. இப்போது வரையில் நகர் உருவாக்கத்தின் 50 வீதமான வேலைத்திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. ஆரம்பத்தில் இது குத்தகை அடிப்படையில் 99 ஆண்டுகளுக்கு கொடுக்கப்பட்ட போதிலும் பின்னர் இலங்கையே முழுமையான உரிமையினை பெரும்.
இப்போதும் கொழும்பு துறைமுக நகரானது கொழும்பின் ஒரு பகுதியாகவே அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்த ஆண்டு இலங்கையின் புதிய வரைபடம் வெளியிடப்படும் அதில் இதனை அவதானிக்க முடியும். கடல் பரப்பில் 269 ஏக்கர் நிலப்பரப்பினை நிரப்பி அதில் இந்த நகரை உருவாக்கிவருகின்றோம். இதில் சீன நிறுவனம் ஒன்றே பிரதான நடவடிக்களை முன்னெடுத்து வருகின்றது. அத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கமும் ஒரு பகுதியினை அபிவிருத்தி செய்து வருகின்றது. இந்த வேலைத்திட்டங்கள் நிறைவுக்கு வந்தவுடன் ஜனாதிபதி இந்த துறைமுக நகரை ஒரு சிறப்பு நகராக அறிவிப்பார். இப்போதும் அவரது கட்டுப்பாட்டின் கீழேயே இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இதற்கான ஆரம்பக்கட்ட நிலங்களை உருவாக்கும் வேலைகளை பூர்த்திசெய்ய முடியும்.
நிலங்களை நிறுவனங்களுக்கு கொடுக்கும் வகையில் தற்காலிக நிறுவனம் ஒன்று இலங்கையில் அமைக்கப்படும். அவர்கள் சீன நிறுவனங்களுக்கான அனுமதிகளை வழங்குவர். அதேபோல் இலங்கை நிறுவனங்களும் இதில் கட்டிடங்களை அமைக்க முடியும். இந்திய நிறுவனங்களுக்கும் அனுமதி உண்டு. நாம் யாரையும் பகைத்துக்கொண்டு இந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை. இந்த துறைமுக நகருடன் இணைந்த இலங்கையின் கரையோர அபிவிருத்தி திட்டங்களையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக கொழும்பில் இருந்து திருகோணமலை வரையில் கரையோர அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM