பிபாவின் சிறந்த வீரருக்கான விருதை போர்த்துக்கல் கால்பந்தாட்ட அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஐந்தாவது முறையாக தட்டிச் சென்றார்.
ஸ்பெயினின் தலைசிறந்த கால்பந்து கழகமான ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வருகிறார் ரொனால்டோ.
இவ்வருடம் லா லிகா, ஸ்பெயின் சூப்பர் கிண்ணம், ஐரோப்பிய சாம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றை ரியல் மாட்ரிட் அணி கைப்பற்றுவதற்கு ரொனால்டோவின் ஆட்டமே முக்கிய காரணம்.
இந்த வருடத்திற்கான பிபாவின் சிறந்த வீரரருக்கான விருது நேற்றுமுன்தினம் (23) அறிவிக்கப்பட்டது. இதில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர் ஆகியோருக்கிடையில் கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் ரொனால்டோ சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டார்.
மெஸ்சி 2ஆவது இடத்தையும், நெய்மர் 3ஆவது இடத்தையும் தட்டிச்சென்றனர். கிறிஸ்டியானோ ரொனால்டோ இந்த விருதை ஐந்தாவது முறையாக பெற்றுள்ளதுடன் ஐந்து முறை விருது வென்ற மெஸ்சியின் சாதனையை சமன் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM