கந்துவட்டி  ; குழந்­தை­க­ளுடன் பெற்றோர் தீக்­கு­ளிப்பு, தாயும் இரு குழந்தைகளும் பலி

Published By: Priyatharshan

24 Oct, 2017 | 01:44 PM
image

நெல்லையில் ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்னால் தீக்குளித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் காவிதர்மம் பதியைச் சேர்ந்த 28 வயதுடைய இசக்கிமுத்து அவரது 25 வயதுடைய மனைவி, 5 மற்றும் ஒரு வயதுடைய இரு மகள் உள்ளிட்ட 4 பேரும் நெல்லை மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று திங்கட் கிழமை தீக்குளித்தனர். 

கந்துவட்டிக் கொடுமையால் குறித்த நால்வரும் தீக்குளித்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், தீக்காயங்களுடன் நெல்லை அரச பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 4 பேரில் சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி காருண்யா, அட்சயா பரணிகா ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் இசக்கிமுத்து வைத்தியசாலையில் உயிருக்காகப் போராடி வருகிறார்.

இது குறித்து இசக்கிமுத்துவின் சகோதரர் தெரிவிக்கையில், 

"என்னுடைய அண்ணன் இசக்கிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி காசிதர்மத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் ரூ.1.45 இலட்சம் கடன் வாங்கியிருந்தார். 

அதை தங்கம்மா என்பவரிடம் கொடுத்திருந்தார். 8 மாதங்களுக்கு முன் வாங்கிய இந்தக் கடன் தொகைக்காக தங்கம்மா ரூ.2,34,000 வட்டி செலுத்தியிருக்கிறார். 

இந்நிலையில் அசல் தொகை ரூ.1.45 இலட்சத்தை தருமாறு முத்துலட்சுமி என் அண்ணிக்கு நெருக்கடி கொடுத்தார். மிரட்டல் விடுத்துவந்தார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் குறைதீர் முகாமின்போது 6 முறை மனு கொடுத்தோம். மனுவை எஸ்.பி., அலுவலகத்துக்கு அவர்கள் மாற்றிவிட்டனர். 

எஸ்.பி. அலுவலகத்திலிருந்து அச்சன்புதூர் பொலிஸ் நிலையத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. 

ஆனால், அச்சன்புதூர் காவல்துறையினர் முத்துலட்சுமி தரப்புக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். எனவே, மிகுந்த மன உளைச்சலோடு இன்று மீண்டும் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தோம். நான் கழிவறை சென்று திரும்புவதற்குள் என்னுடைய சகோதரர் குடும்பத்தினர் இந்தக் கோர முடிவை எடுத்துள்ளனர். என் சகோதரர் குடும்பத்தினர் உயிரிழந்தால் அதற்கு மாவட்ட ஆட்சியரே பொறுப்பேற்க வேண்டும்" எனக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கந்துவட்டிக் கொடுமையால் தீக்குளித்து உயிரிழந்த மூன்று பேரின் சடலங்களும் உறவினர்களிடம் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 11:11:08
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10
news-image

ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்...

2024-04-16 15:39:41
news-image

டென்மார்க்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தை...

2024-04-16 16:56:21