பிலிப்பைன்ஸில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பலம்பெற்று விளங்கும் மராவி பிராந்தியத்தில் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான எப்.பி.ஐ. ஆல் மிகவும் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகளில் ஒருவரை படையினர் கண்டுபிடிக்க உதவிய 16 வயது சிறுவன் ஒருவன் 5 மில்லியன் டொலர் சன்மானத்தைப் பெறக் கூடியவர்களுக்கான வரிசையில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளின் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்துக்கான தலைவரான இனிலொன் ஹபிலனும் அந்தக் குழுவின் பிறிதொரு தலைவரான ஓமர்கயாம் மோட்டும் கடந்த வாரம் மராவி பிராந்தியத்தில் படையினரால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர்.
இந்த முற்றுகை நடவடிக்கையின் போது அந்த தீவிரவாதிகளால் பணயக்கைதியாக பிடித்துவைக்கப்பட்டிருந்த நிலை யில் மீட்கப்பட்ட 16 வயது சிறுவன் ஒருவன் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே மேற்படி தீவிரவாத குழுத் தலைவர்கள் இருவரும் சுற்றிவளைக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.
கப்பப் பணம் பெறுவதற்காக அநேக அமெரிக்கர்களை கடத்தியதுடன் அந்த அமெரிக்கர்களில் ஒருவரை 2001ஆம் ஆண்டில் பஸிலன் மாகாணத்தில் தலையைத் துண்டித்து படுகொலை செய்தவர் எனக் குற்றஞ்சாட்டப்படும் ஹபிலன் தொடர்பில் தகவல் தருபவர்களுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலரை சன்மானமாக வழங்குவதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் பிலிப்பைன்ஸ் இராணுவத்தின் வேண்டுகோளின் பேரில் அமெரிக்க வேர்ஜினிய மாநிலத்தில் நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில் மேற்படி இராணுவத்தால் கொல்லப்பட்டவர் எப்.பி.ஐ. ஆல் மிகவும் தேடப்படும் ஹபி லன் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தூதரக பேச்சாளர் மோல்லி கொஸ்சினா தெரிவித்தார்.
இதன்பிரகாரம் ஹபிலன் மறைந்திருந்த கட்டடத்தை சரியாக அடையாளம் காண்பித்து அவரைக் கொல்வதற்கு படையினருக்கு உதவிய குறிப்பிட்ட 16 வயது சிறுவனுக்கோ அல்லது அந்தத் தீவிரவாதியைக் கொன்ற பிலிப்பைன்ஸ் இராணுவத்துக்கோ அமெரிக்காவின் சன்மானத் தொகை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM