நீர்கொழும்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு – - 10, மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டவாராவார். இவரின் இடது கையில் முறிவு ஏற்பட்டுள்ளதுடன் வலது காலில் காயம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாகன திருட்டு சம்பந்தமான குற்றச்சாட்டில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த கைதி தாக்குதலுக்கிலக்காகி நீர்கொழும்பு வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் மீதான தாக்குதல் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
தன் மீது சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களே (ஜெயிலர்கள்) தாக்குதல் மேற்கொண்டதாக பாதிக்கப்பட்ட கைதி நீர்கொழும்பு வைத்தியசாலையில்சிகிச்சை அளித்த வைத்தியரிடம் தெரிவி த்துள்ளார் அந்த வைத்தியர் இது தொடர்பாக வைத்தியசாலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
வைத்தியசாலை பொலிஸார் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து நீர்கொழும்பு பொலிஸார் சம்ப வம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்தகைதி வைத்தியசாலையின் எலும்பு முறிவு சிகிச்சையை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.