கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவில் காணாமல் போனதாக கூறப்பட்ட கொலன்னாவை - சாலமுல்லவைச் சேர்ந்த இரு சிறுமிகள் மற்றும் இளம் தாய் ஆகியோர் வெல்லம்பிட்டிய மற்றும் கம்பஹா பொலிஸ் நிலையங்களில் சரணடைந்த அதேவேளை சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட ஐவரையும் வெல்லம்பிட்டி பொலிஸார் நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் டி.எம்.வெலிகொடபிட்டிய முன்னிலையில் ஆஜர் செய்த போது அவர்களை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
அத்துடன் 14, 15 வயதுகளை உடைய இரு சிறுமிகளையும் சிறுவர் காப்பகத்தில் அன்றைய திகதி வரை தடுத்து வைக்கவும் நீதிவான் உத்தரவு பிறப்பித்தார்.
இந்நிலையில் சிறுமிகள் மற்றும் யுவதி காணா மல்போனமைக்கான காரணம் தொடர்பில் நேற்று மாலையாகும் போதும் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
15 வயதான சிறுமியின் காதல் தொடர்பு, வீட்டு வேலைகளுக்காக சிறுமிகளை அமர்த்தும் சட்ட விரோத நடவடிக்கை இந்த காணாமல்போனமை யின் பின்னணியில் உள்ளதா என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த சனிக்கிழமை (14 ஆம் திகதி) கொலன்னாவை - சாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளம் தாய் மாலினி வத்சலா பெரேரா, அவரது சகோதரி முறையிலான 15 வயதுடைய யஷந்தி மதுஷானி பெரேரா மற்றும் அவரகளது வீட்டின் அருகே வசிக்கும் 14 வயதுடைய சரிதா சுவேதா எனும் தமிழ் சிறுமி ஆகியோர் காணாமல்போயிருந்தனர்.
கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒருகொடவத்தை பகுதியில் உறவினர் வீடொன்றுக்கு வந்துவிட்டு, தீபாவளிக்காக சுவேதாவுக்கு ஆடை கொள்வனவு செய்ய செல்வதாக கூறிவிட்டு வெளியேறியிருந்த நிலையிலேயே அவர்கள் மூவரும் இவ்வாறு காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM