தமிழீழம் உருவாக நல்லாட்சி துணை : ஜீ.எல்.பீரிஸ்

Published By: Priyatharshan

20 Oct, 2017 | 12:52 PM
image

வடக்கில் அன்று புலி­க­ளுக்கு ஊதுகு­ழ­லாக செயற்­பட்டு தனித் தமி­ழீ­ழத்தை உரு­வாக்க கனவு கண்ட தமிழ்த் தேசியக் ­கூட்­ட­மைப்பு மீண்டும் தனி­ இராஜ்­யத்தை நிலை­நாட்ட முயற்­சித்து வரு­கி­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்­கமும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தமி­ழீழ உரு­வாக்­கத்­திற்கு துணை­போ­கின்­றது என கூட்டு எதிர்க்கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் பேரா­சி­ரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரி­வித்தார். 

பொர­ளையில் அமைந்­துள்ள கலா­நிதி என்.எம். பெரேரா நிலை­யத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். அவர் தொடர்ந்தும் உரை நிகழ்த்­து­கையில், நாட்டில் இடம்­பெறும் சம­கால நில­வ­ரங்­களை பார்க்கும் போது தனி­ம­னித சுதந்­திரம், தனி­ம­னித உரிமை உண்­மையில் இங்கு உள்­ளதா? என்ற கேள்வி எழும்­பு­கின்­றது. ரவி கரு­ணா­நா­யக்­கவின் நிதி க்கொள்ளை விவ­காரம் தொடர்பில் உண்­மையை அம்­ப­லப்­ப­டுத்­திய அனிகா விஜய சூரிய மற்றும் அவ­ரது குடும்­பத்­தி­ன­ருக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டுள்­ள­மை­யா­னது உண்­மையை, சத்­தி­யத்தை கூற விளை­வோ­ருக்கு ஏற்­படும் கதியை சற்று சிந்­தித்து பார்க்க வேண்டும். அதுதான் இந்த நல்­லாட்­சியின் ஜன­நா­ய­கமா? ஜன­நா­ய­கத்தை குழி­தோன்றி புதைக்கும் செயற்­பா­டு­க­ளி­லேயே தொடர்ந்தும் இந்த அரசு செயற்­பட்டு வரு­கின்­றது.   மத்­திய வங்கி விவ­காரம் உள்­ளிட்ட அர்­ஜுன மகேந்­திரன் விடயம் தொடர்பில் ஆணைக்­குழு முன்­பாக ஆஜ­ராகி உண்மை நிலையை வெளிப்­ப­டுத்­த­வுள்­ள­தாக ரணில் விக்­ர­ம­சிங்க குறிப்­பிட்­டுள்ளார். இதி­லி­ருந்து புல­னா­வது யாதெனில் அர்ஜுன மகேந்­தி­ரனை பாது­காக்­கவே பிர­தமர் முயற்­சிக்­கின்றார்.

அண்­மைக்­கா­ல­மாக அமைச்சர் அம­ர­வீர ஊட­கங்கள் மூல­மாக பல­வி­த­மான கருத்­துக்­களை கூறி வரு­கின்றார். எம்­மையும் வசை­பாடி வரு­கின்றார். மஹிந்த அம­ர­வீர என்­பவர் ஐக்­கிய தேசிய கட்­சியில் ஊறிப்­போன ஓர் உறுப்­பினர். சிறி லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியின் தேசியம், அதன் மகத்­துவம், அதன் கொள்­கைகள் என்­பன இன்று சிறி லங்கா சுதந்­திரக் கட்­சியில் அங்கம் வகிக்கும் மஹிந்த அம­ர­வீ­ர ­போன்­றோ­ருக்கு எங்கே புரி­யப்­போ­கின்­றது? இவ­ரைப்­போன்ற பதவி மோகம் பிடித்­த­வர்கள் இந்நல்­லாட்சி அர­சாங்­கத்தில் இருப்­ப­த­னா­லேயே நாம் அர­சோடு இணை­யாமல் கூட்டு எதிர்க்கட்­சியில் அங்கம் வகிக்­கின்றோம். மஹிந்த அம­ர­வீர தேவை­யற்ற பரப்­பு­ரை­களை கூறி தன்னை ஒரு வீர­ராக காட்டி கொள்ள முனை­வது எமக்கு வேடிக்­கை­யாக தோன்­று­கின்­றது. வடக்கில் நிலவும் சம்­ப­வங்­களை பார்க்கும் போது அங்கு வேறொரு நாடு உரு­வா­கி­யுள்­ளதா? என்ற ஐயம் எமக்கு எழும்­பு­கின்­றது. அங்கு போராட்­டங்கள் நடத்த முடி­யாது என நீதி­மன்றம் ஆணைப்­பி­றப்­பித்­துள்ள போதிலும் கடந்த சில தினங்­க­ளுக்கு முன்னர் போராட்­டங்கள் இடம்­பெற்­றுள்­ளன. இதன் பின்­ன­ணியில் இருப்­பது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஆகும். நீதி­மன்­றமும் பொலிஸ் சேவையும் தமது பலத்தை வடக்கில் இழந்­து­விட்­டதா? என நாம் கேள்வி எழுப்­பு­கின்றோம்.

அன்று வடக்கில் புலிகளுக்கு ஊதுகுழலாக செயற்பட்டு தனி தமிழீழத்தை உருவாக்க கனவு கண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் அங்கு தமிழ் இராஜ்ஜியத்தை நிலைநாட்ட முயற்சித்து வருகின்றது. மைத்திரிபால தலைமையிலான அரசாங்கமும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ உருவாக்கத்திற்கு துணைபோகின்றது  என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இடியுடன் கூடிய மழை பெய்யும் -...

2025-03-16 15:40:18
news-image

கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில்...

2025-03-16 15:50:34
news-image

வருடம் முழுவதும் மகளிர் தினத்தை கொண்டாட...

2025-03-16 15:50:16
news-image

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பூனாகலை கபரகலை தோட்ட...

2025-03-16 15:19:56
news-image

மட்டக்களப்பில் மீண்டும் மழை ; போக்குவரத்து...

2025-03-16 14:38:39
news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:56:38
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05