உங்­க­ளுக்கு வாக்­க­ளித்த எமக்கு விடிவை பெற்றுத் தாருங்கள் : அரசியல் கைதிகளின் தாய்மார் ஜனாதிபதியிடம் உருக்கம்

Published By: Priyatharshan

20 Oct, 2017 | 10:33 AM
image

கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் நாம் உங்­க­ளுக்­குத்தான் வாக்­க­ளித்தோம். சிறையில் உள்ள எமது பிள்­ளைகள் உங்­க­ளுக்கு வாக்­க­ளிக்­கு­மாறே எமக்கு கூறி­யி­ருந்­தனர். அவ்­வாறு உங்­களை ஆத­ரித்த எமது பிள்­ளை­க­ளுக்கு நீங்கள் விடிவைத் தர­வேண்டும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள  அர­சியல் கைதி­களின்  தாய்மார் கண்ணீர் மல்க கோரி­யுள்­ளனர். 

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால  சிறி­சே­னவை வட­மா­காண சபை ஆளுநர்  ரெஜினோல்ட் குரேயின் ஏற்­பாட்டில் அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில்

 உண்­ணா­வி­ரதப் போராட்­டத் தில் ஈடு­பட்­டுள்ள இரு அர­சியல் கைதி­களின் தாய்­மாரும் 

மற்­றொரு அர­சியல் கைதியின் மனை­வியும்  சந்­தித்து  கலந்­து­ரை­யா­டினர். இந்த சந்­திப்பில் மாகா­ண­சபை உறுப்­பினர் எம். கே. சிவா­ஜி­லிங்கம் உட்­பட பலரும் பங்­கேற்­றி­ருந்­தனர். 

இதன்­போது ஜனா­தி­பதி  அர­சியல் கைதி­களின்  தாய்­மார்கள், மற்றும் மனை­வி­யிடம் கருத்­துக்­களை கேட்­ட­றிந்­தி­ருந்தார்.  இதன்­போது அர­சியல் கைதி­களின் தாய்மார்  கண்ணீர் மல்க தமது பிள்­ளை­களை காப்­பாற்­று­மாறு  ஜனா­தி­ப­தி­யிடம் மன்­றா­டினர்.  எமது பிள்­ளைகள் பல வரு­டங்­க­ளாக சிறையில் வாடு­கின்­றனர்.

அவர்­க­ளது வழக்­குகள்  வவு­னியா மேல் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து   அநு­ரா­த­புரம் மேல்­நீ­தி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ளன. எனவே எமது  மகன்­மா­ரது கோரிக்­கை­களை நீங்கள் நிறை­வேற்­ற­வேண்டும். கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் உங்­க­ளுக்கே நாம்  வாக்­க­ளித்­தி­ருந்தோம். சிறையில் உள்ள எமது பிள்­ளைகள் உங்­க­ளுக்கே வாக்­க­ளிக்­கு­மாறு எம்மிடம் கூறியிருந்தனர்.  உங்களை ஆதரித்த எங்களுக்கு நீங்கள் விடிவைப் பெற்றுத்தரவேண்டும் என்று   தாய்மார்  ஜனாதிபதியிடம்  கண்ணீர் விட்டு அழுது கோரிக்கை விடுத்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆதாரங்களைத் திரட்டும் பொறிமுறைக்கான ஆணையை வலுப்படுத்த...

2025-02-15 17:54:48
news-image

சட்டமா அதிபரின் ஆலோசனையை தற்காலிகமாக இடைநிறுத்துவது...

2025-02-15 20:32:09
news-image

இன்றைய வானிலை

2025-02-16 06:19:25
news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07