கம்பளை குருந்து வத்தை பிரதேசத்தில் சமய வகுப்பிற்குச்சென்ற சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயற்சித்ததாக கூறுப்படும் விகாராதிபதிக்கு எதிராக நேற்று பகல் குருந்து வத்தை நகரில் பிரதேச வாசிகளால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கம்பளை குருந்துவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரையின் விகாராதிபதி சமய வகுப்பிற்குச் சென்ற சிறுமி ஒருவரை அங்கு ஒதுக்குப்புறமாக அமைந்திருந்த அரச மரத்திற்கு பின்புறமாக அழைத்துச் சென்று பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்த முயற்சி த்ததாக கூறப்டும் சம்பவத்தையடுத்து கைது செய்யப்பட்டார்.
கம்பளை மாவட்ட நீதி மன்ற நீதிவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட குறித்த பிக்கு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் ஊர்மக்கள் இணைந்து குறித்த விகாரையை பூட்டியிருந்த நிலையில் பிணையில் விடுதலையாகி வந்த குறித்த பிக்கு மீண்டும் விகாரைக்கு வந்து பூட்டை உடைத்து விகாரைக்குள் சென்றுள்ளார்.
இதன் போது ஒன்றுகூடிய ஊர்மக்கள் உடனடியாக பிக்கு வெளியேற வேண்டுமென கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டதையடுத்து குருந்து வத்தை பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து பிக்குவை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM