தனக்கு எதிராக கறுப்புக்கொடியேந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது வாகனத்திலிருந்து இறங்கிச் சென்று நெகிழ்வுப் போக்குடன் செயற்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்திலும் தீர்வொன்றை வழங்க வேண்டும் என்று பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் சபையில் கோரினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, இலத்திரனியல் கொடுக்கல்வாங்கல்கள் (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
அநுராதபுரம் சிறைச்சாலையில் தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் நிலைமைகள் மோசமடைந்துள்ளன. போர் காலங்களில் அரசியல் கைதிகள் 25 வருடங்களுக்கு மேலாக சிறையில் இருக்கின்றனர். தமது வழக்குகள் துரிதமாக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் நீண்டகாலக் கோரிக்கையாகும்.
இதனை வலியுறுத்தியே அவர்கள் பல முறை போராட்டங்களில் இறங்கினார்கள். நாம் அவர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைய அப்போராட்டங்கள் கைவிடப்பட்டன. இந்த விவகாரம் அரசியலாக்கப்படுகிறது. பதின்நான்கு வருடங்களாக வவுனியாவில் நடைபெற்ற வழக்கு விசாரணைகள் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களில் அநுராதபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளன. சாட்சிகளைப் பாதுகாப்பதற்காக வழக்குகள் மாற்றப்பட்டிருப்பதாக அரசாங்கத் தரப்பில் கூறப்படுகிறது. அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டபோது, ஜனாதிபதி தனது பாதுகாப்பையும் பொருட்படுத்தாது ஆர்ப்பாட்டக்காரர்களை நேரில் சென்று கலந்துரையாடியமை நல்லதொரு விடயமாகப் பார்க்கப்படுகிறது. அப்படியான அணுகுமுறையைக் கொண்ட ஜனாதிபதி கைதிகளின் விடுதலை விவகாரத்தில் அதிக அக்கறை காண்பிக்க வேண்டும்.
பல வருடங்களாக சிறையில் உள்ளவர்களின் குடும்பங்கள் பல பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளன. புதுக்குடியிருப்பில் போராட்டத்தை இரண்டாவது முறையாக எமது மக்கள் தொடர்ந்துள்ளனர். தமது காணியை இராணுவத்தினரிடமிருந்து மீட்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து வருகிறது.
இவ்விடயம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் தலைமையிலான குழுவினர் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். 19 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவேண்டிய சூழ்நிலையில் 7 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. மூன்று மாதங்களில் 11 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இராணுவத்தினர் அந்தக் காணிகளை விட்டுச் செல்வதாகத் தெரியவில்லை. அந்த இடத்தைவிட்டுச் செல்வதற்கு மேலதிக பணம் தேவைப்படுவதாகவும், இப்பணத்தை அரசாங்கம் வழங்கினால் அப்பகுதியிலிருந்து வெளியேற முடியும் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்கின்றோம் என்றார்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM