இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் நீதவான் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் இன்று இந்திய மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.
தலைமன்னார் கடற்பிராந்தியத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் இந்திய மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டதுடன், படகொன்றும் தலைமன்னார் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கைதான மீனவர்கள் இராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் என யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.
மன்னார் கடற்றொழில் திணைக்களத்திடம் இம்மீனவர்கள் ஒப்படைக்கப்பட்டதுடன் அவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM