முச்சக்கரவண்டிகள் நேர்க்கு நேர் மோதி விபத்து : 6 பேர் படுகாயம்

Published By: Robert

17 Oct, 2017 | 12:17 PM
image

மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் நேற்று இரவு 8 மணியளவில் முச்சக்கரவண்டிகள் இரண்டு நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 6 பேர் படுகாயங்களுக்குள்ளாகி மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஸ்கெலியா - நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் மஸ்கெலியா பகுதியிலிருந்து பிரவுண்லோ நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றும் மவுஸ்ஸாக்கலையிலிருந்து மஸ்கெலியா பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த மற்றுமொரு முச்சக்கரவண்டியும் மஸ்கெலியா பிரவுண்லோ பகுதியில் இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் இரு முச்சக்கரவண்டியிலும் பயணித்த 6 பேர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும், அதிக வேகம் மற்றும் கட்டுப்பாடு இல்லாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்துடன் தொடர்புடைய இரு முச்சக்கரவண்டிகளையும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களமிறங்கும் ஜேர்மனிய...

2025-03-19 15:01:24
news-image

25 சதவீதமான மாணவர்கள் பாடசாலை கல்வியை...

2025-03-19 14:27:13
news-image

இலங்கை கடற்படை இந்திய மீனவர்கள் மீது...

2025-03-19 14:15:59
news-image

மஹிந்த ராஜபக்ஷவின் மனு நிராகரிப்பு!

2025-03-19 14:24:30
news-image

குடும்பத்துடன் யாழ் சென்று திரும்பிய களனி...

2025-03-19 14:17:57
news-image

கைது செய்யச் சென்ற பொலிஸார் மீது...

2025-03-19 13:32:19
news-image

பிரபல இசை நிகழ்ச்சியின் வெற்றியாளரான சமோத்...

2025-03-19 13:27:32
news-image

தேசபந்து தென்னக்கோனுக்கு விளக்கமறியல்!

2025-03-19 14:17:50
news-image

பல்வேறு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய...

2025-03-19 13:18:12
news-image

யாழ். மருதனார் மடத்தில் விபத்து ;...

2025-03-19 13:13:07
news-image

தேசபந்து தென்னக்கோனின் வீட்டிலிருந்து 1000 மதுபான...

2025-03-19 13:03:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-03-19 12:20:01