(எம்.நியூட்டன்)
நயினாதீவு மற்றும் நெடுந்தீவு படகு உரிமையாளர்களுக்கு இடையில் நீண்டகாலமாக காணப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பல தீர்மானங்கள் எட்டப்பட்டு, பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
பயணிகளின் பாதுகாப்பு, நியாயமான கட்டணம், படகு சேவையின் ஒழுங்குமுறை மற்றும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி ஆகியவற்றை கருத்திற்கொண்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் படகுகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தையே அறவிடுதல். நெடுந்தீவு படகுகளுக்கு முன்னுரிமை வழங்குவதில் நயினாதீவு படகு உரிமையாளர்கள் ஒற்றுமையுடன் செயற்படுதல்.
குறிகட்டுவான் பகுதியில் வேலணை பிரதேச சபையின் ஆதரவுடன் நேரக்கணிப்பாளர் ஒருவரை நியமித்து, படகு சேவைகளை ஒழுங்குபடுத்துதல்.
படகுகளின் விபரங்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை பொதுமக்கள் தெளிவாக அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்துதல்.
படகுகளை வாடகைக்கு அமர்த்துவதற்கான தொடர்பு இலக்கங்கள் மற்றும் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கான தொடர்பு இலக்கங்களை பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்துதல்.
இதனுடன், படகு சேவையை மேலும் ஒழுங்குபடுத்துவதற்கான பல முக்கியமான தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டன.
இந்தக் கலந்துரையாடலில் வேலணை பிரதேச செயலாளர், வேலணை பிரதேச சபையின் தவிசாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் தலைவர், படகு உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் படகு உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் றஜீவன் பிரச்சினைகளை அரசியலாக்குவதல்ல எமது நோக்கம் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒரே மேசையில் அமர்த்தி, நியாயமானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வை உருவாக்குவதே எமது அணுகுமுறை.
மக்களின் பயணம் பாதுகாப்பாகவும், நியாயமான கட்டணத்திலும் அமைய வேண்டும். அதேவேளை, உள்ளூர் படகு உரிமையாளர்களின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்பட வேண்டும். மக்களுக்கும் சேவை வழங்குநர்களுக்கும் இடையே நம்பிக்கையை உருவாக்கும் ஒழுங்குமுறையான நிர்வாகமே எமது இலக்கு என அவர் மேலும் கூறினார்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM