பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி இதய குறைபாட்டிற்கான நவீன சத்திர சிகிச்சை

02 Sep, 2026 | 05:10 PM
image

உலகளவில் பிறக்கும் இரண்டாயிரம் குழந்தைகளில் ஒரு குழந்தை பிறவி இதய குறைபாட்டுடன் பிறக்கிறது என்று அண்மைய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி இதய பாதிப்புடன் பிறக்கும் பிள்ளைகள் ஐநூறில் ஒருவர் என ஆய்வாளர்கள் விவரிக்கிறார்கள். இந்நிலையில் இத்தகைய பிறவி இதய குறைபாட்டை நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணத்தை வழங்க இயலும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள்.

பொதுவாக தாயின் வயிற்றில் சிசுவாக இருக்கும் போது அதன் இதயத்தில் உள்ள ரத்த நாளங்களுக்கும், நுரையீரல் நாளங்களுக்கும் இடையே சிறிய அளவிலான ரத்த நாள திறப்பு என்பது இயல்பாக இருக்கும். இதன் மூலம் இதயத்தில் இருந்து நேரடியாக உடலுக்கு குருதி ஓட்டம் நடைபெறும். இத்தகைய தருணத்தில் குழந்தை பிறந்ததும்... அவை சுவாசிக்க தொடங்கியதும்... இந்த பிரத்யேக ரத்த நாளங்கள் தானாகவே மூடி க்கொள்ளும். ஆனால் சில பிள்ளைகளுக்கு இத்தகைய ரத்தநாளங்கள் இயல்பாக மூடிக் கொள்ளாமல்.. திறந்த நிலையில் இருக்கும். இதனால் இயல்பான அளவைவிட கூடுதலான குருதி... நுரையீரல் பகுதிக்கு செல்வதால் இதயம் மற்றும் நுரையீரலில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

பிள்ளைகள் தாய்ப்பால் மற்றும் உணவை பசியாற மறுப்பது... வியர்வை அதிகமாக வெளியாவது... அழுவது... சுவாசிக்க சிரமப்படுவது... எளிதில் சோர்வடைவது... இதய துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பது... போன்ற அறிகுறிகள் இருந்தால், உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்குச் சென்று வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும்.

பொதுவாக இத்தகைய பாதிப்பு குறை மாதத்தில் பிறக்கும் பிள்ளைகளுக்கு பெரும்பான்மையாக ஏற்படுவதாகவும், அத்துடன் மரபணு மாற்றம் காரணமாக சிலருக்கு ஏற்படுவதாகவும் வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். ஆனால் இதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்காவிட்டால்... உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி விடும் என வைத்தியர்கள் எச்சரிக்கிறார்கள்.

இதுபோன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலைக்கு வரும் பச்சிளம் குழந்தைகளை வைத்தியர்கள் எக்கோ கார்டியோ கிராம், மார்பக எக்ஸ்ரே,  எலக்ட்ரோ கார்டியோ கிராம் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள். நவீன மருத்துவ தொழில்நுட்பங்களின் மூலம் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சையை வழங்கி, முதன்மையான நிவாரணத்தையும், பிறகு சிறிய அளவிலான சத்திர சிகிச்சையும் மேற்கொண்டு இதற்கு முழுமையான நிவாரணத்தையும் அளிக்கிறார்கள்.

வைத்தியர் வினோத்குமார் - தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இளம் வயதினருக்கு ஏற்படும் ஓஸ்குட்-ஸ்க்லாட்டர் நோய்...

2026-09-10 14:25:35
news-image

புற்றுநோய் பாதிப்பைக் கண்டறியும் நவீன பரிசோதனை

2026-09-09 15:23:55
news-image

அக்யூட் லிம்ப் இஸ்கிமியா எனும் கால்பகுதியில்...

2026-09-08 16:50:11
news-image

புரோஸ்டேட் வீக்க பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் நவீன...

2026-09-07 15:37:08
news-image

காலையில் படுக்கையில் இருந்து எழும் போதே...

2026-09-05 16:54:07
news-image

அதீத மனசோர்வு பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2026-09-04 16:07:36
news-image

சைனஸ் வெனோசஸ் எட்ரியல் செப்டல் கோளாறு...

2026-09-03 16:43:45
news-image

பேடன்ட் டக்டஸ் அர்டெரியோசிஸ் எனும் பிறவி...

2026-09-02 17:10:39
news-image

ரெக்டோசிக்மாய்ட் புற்றுநோய் பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2026-09-01 14:59:24
news-image

இண்டஸ்ஸஸ்செப்ஷன் எனும் குடலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2026-08-31 17:33:47
news-image

சிறுநீரக கற்களை நீக்கும் நவீன லேசர்...

2026-08-29 16:11:51
news-image

பல்மனரி அல்வியோலர் புரோட்டீனோசிஸ் எனும் நுரையீரல்...

2026-08-28 17:05:22