தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் புதல்வரும் அம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக் ஷ எம்.பி. இராமாயணத்தின் சுந்தர காண்டம் பகுதியை வாசிக்க ஆரம்பித்திருக்கின்றாராம்.
மத்தள விமான நிலையம் உட்பட நாட் டின் வளங்களை வெளிநாட்டிற்கு விற்பனை செய்வதை கண்டித்து கடந்த ஆறாம் திகதி அம்பாந்தோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பாக கடந்த 10ஆம் திகதி மாலை கலகம பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்ற மூன்று மணி நேர விசாரணைகளை அடுத்து அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாந்தோட்டை மாவட்டத்தின் கூட்டு எதிரணி ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக் ஷ, டி.வி. சானக்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர, மேல் மாகாண சபை உறுப்பினர் உபாலி கொடிகார, தென் மாகாண சபை உறுப்பினர் சம்பத் அத்துகோரள மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பிரசன்ன ஆகிய அறுவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் அம்பாந்தோட்டை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து தங்காலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அறுவரும் ஒரே சிறைக்கூடத்தினுள்ளேயே தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக் ஷ எம்.பி.சிறைக்கூடத்தில் இராமாயணத்தின் சுந்தர காண்டம் பகுதியை வாசிப்பதற்கு ஆரம்பித்துள்ளாராம்.
சுந்தர காண்டம் பகுதியை வாசிப்பதால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என அவரின் தமிழ் நண்பர்கள் அளித்த ஆலோசனையை அடுத்து இந்த செயற்பாட்டை ஆரம்பித்துள்ளாராம். இராமாயணத்தின் ஏழு காண்டகளில் சுந்தர காண்டமானது விஷ்ணுவின் அவதாரமான இராமனுடைய ஆத்மான பக்தனான ஆஞ்சநேயரின் அறிவுக் கூர்மை, வீரம், சொல்வன்மை, பெருமை, பக்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களை வெளிப்படுத்துவதாக உள்ளது.
குறிப்பாக சுந்தரகாண்டத்தினை பாராயணம் செய்வதால் அல்லது வாசிப்பதால், இறைபக்தி, மனதிற்கு நிம்மதி, நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மனோ பலம், துன்பங்கள், துக்கம் நிறைவுக்கு வந்து தைரியம் என்பன கிடைக்கும் என முன்னோர்கள், ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM